Monday, September 29, 2025

 


தினம் ஒரு லலிதா நாமம்----35,

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள்,29 செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம்.                                                                                                                     இன்று நாம் அம்பாளின் முப்பத்து ஐந்தாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் இடையான இடுப்புப் ப்ரதேசத்தின் அழகையும்,,அவைகளின் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமம்  அம்பாளின் பதினைந்தாவது ஸ்லோகத்தில் வருகின்றது

35. லக்ஷ்ய ரோம லதா தாரதா ஸமுந்நேய மத்யமா:

 

லக்ஷய

கண்ணுக்குப் புலப்படாத                                                       

ரோம

முடி, ரோமம்                                                                                                             

லதா

கொடி                                                                             

தாரதா

புறப்படுதல்                                                                                          

சமுந்நேய

முடிவுக்கு வருதல்                                                                                    

மத்யமா

இடைப்பகுதி

அம்பாளின் இடைப் பகுதியிலிருந்து மெல்லிய ரோம்ங்கள் புறப்பட்டு மேல் நோக்கி சென்று மார்புப் பகுதியை அடைகின்றன.அம்பாலின் மெல்லிடை கண்ணுக்குப் புலப்படாத மென்மையாய் உள்ளது.ஆனால் அதனின்றும் தோன்றி மேலே செல்லும் ரோமங்களினால் மட்டுமே அம்பாளின் இடையை உணரமுடியும்

பெண்களின் இடையை மெல்லிடை என்று கூறுவோம்.அம்பாளின் இடை மிக மெல்லிதாக கண்ணுக்குத் தெரியாது இருக்கின்றது. சரி அதை எப்படி உணர்ந்து கொள்வது? முந்தைய நாமாவளியில் நாம் பார்த்த்துபோல் அம்பாளின் நாபியிலிருந்து புரப்படும் மெல்லிய கொடி போன்ற முடிகள் மேலே மார்பகங்களில் முடிவடைகின்றன.அந்த ரோமங்களினால் மட்டுமே அம்பாளுக்கு உள்ள மெல்லிடையை உணர முடியும்

முந்தைய நாமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தவழும் முடியிலிருந்து மட்டுமே அவளுடைய இடுப்பை அறிய முடியும். ஆத்மா நுட்பமானது, பரமாத்மா மிகவும் நுட்பமாது பரமாத்மாவை சாதாரணமாக உணரமுடியாது.ஆழ்ந்த பக்தியாலும்,த்யானத்தினம் மட்டுமே உணரமுடியும்.மேலும் கூர்ந்து கவனிப்பதன் மூலம் (தியானத்தின் மூலம்) மட்டுமே அறிய முடியும் என்பதே இதன் ரகசிய அர்த்தம்.


 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை முப்பத்து ஐந்தாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                     இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                   

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள்,29 செப்டம்பர், 2025


 


No comments:

Post a Comment