Monday, November 16, 2015




சுப்பிரமணிய புஜங்கத்தின் ஆறாவது பாடல் 

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேதிரூடா
இதீவப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)



கந்தநாதனுறைக்குன்றேறுவோர்ஈசனதிருவருளோடு                       அந்தக் கைலாயமேறுவது திண்ணம் என்றுணர்த்தும் நம்     சொந்தப்பிள்ளை கந்தமலையுறைவான் மலர்த் திருவடிகள்          பந்தமாய் என்றும் விடாதுநாம் உய்யப்பற்ற வாழ்கவே

கந்த நாதனுரையும் குன்று ஏறுவோர் அவன் தந்தை ஈசனருளோடு    திருக் கைலாயம் ஏறுவது திண்ணம் என்று உணர்த்தும் நம் சொந்தப் பிள்ளையான திருச்செந்திலோனின் திருவடிகளை என்றும் நாம் விடாது உய்யப் பற்றிட வாழ்கவே 

Saturday, November 14, 2015



சுப்பிரமணிய புஜங்கம் 

சுப்பிரமணிய புஜங்கத்தின் ஐந்தாவது பாடல் 

தீராத துன்பம் தீரும் 

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம்மே
இதீவோர்மி பங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத் ஸரோஜே குஹம்தம் (5)

  • வந்துவந்து கரையில் மோதும்அலைகள்மறைவாற்போல்         வந்த தீவினையாவும்  நாடிவந்தவர்தம்மைவிட்டு எந்நாளும்         வந்தவழிதெரியாமல் மறையுமென்றுரைப்பார்போன்றுவிளங்கும் செந்திலுறை கந்த நாதனை என் மனத்துள் வைத்துள்ளேன்


விடாது என்னாளும் கடலிலிருந்து எழும் அலைகள் கரையில் வந்து மோதி மறைவது போல தன்னை நாடி வருபர்கள் வினைகள் யாவும் அவர்களை விட்டு மறையும் என்று உறைப்பார்ப் போலல விளங்கும் செந்தில் நாதனை என் மனதுள் வைத்துள்ளேனே 

Thursday, November 12, 2015



சுப்ரமண்ய புஜங்கத்தின் நான்காவது பாடல் 



யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தேததைவ
இதிவ் யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)
  யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் (4)


தன்சன்னிதி நாடியடைந்தோர் யாராயினும் அவர் இப்பெரு

வன் பிறவிக்கடல் நீந்துவாரென்றருளும் வடிவழகு வேலோன்  

மென்மலர் பாதமுடை அன்னை மாதேவி பராசக்தி மனமகிழ்

அன்புக்குமரன் இச்செந்திற்கறையிலுறைவோனை உள்ளுவோம்  4


அன்னை பராசக்தியின் மனம் மகிழ்  அன்புக்குமரன்  திருச்செந்தில் 

கறையில் உறைபவனான வடிவழகுறு வேலவன் தன் சன்னிதி வருபபவர்

 யாராயினும் இப்பிறவிகடல் நீந்திக் கரையேற அருள்பவன் அவன் 

திருவடிகளை மனமுருகி உள்ளுவோம்