Friday, November 30, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி   5
யாமிஷும் கிரிஷந்த ஹஸ்தே பிபர்ஷ்ய ஸ்தவே
சிவாம் க்ரித்ரதாம் குருமா ஹிம்ஹ்சீ புருஷஞ்சகத்
  கயிலை மலியிலிருந்துகொண்டு உலகிற்கு இன்பத்தைக் காட்டுபவ்ரே.கயிலைமலையிலிருந்த்கொண்டு சரணடைந்தோரை ரக்ஷிப்பவரே பாபிகள் மேல் பிரயோகிப்பத்ற்காக தங்கள் கையிலுள்ள பாணத்தை சாந்தமாக்குங்கள் அதைக்கொண்டு மக்களையும் உலகத்தையும் துன்புறச்செய்ய வேண்டாம்
சிவேன வசசா த்வா கிரி சாச்சா வதாமசி
யதா ந: சர்வம் இஜ்ஜக தய்க்ஷ்மம் சுமனா அஸத்து
  கயிலை மலையில் உறைபவரே தங்களை அடைவதற்கு மங்களகரமான ஸ்துதி வசனகளால் போற்றுகிறோம்.எங்களைச் சார்ந்த உறவினர்களும் ஆவின்ங்களும் நோயற்றவைகளாகவும் பரஸ்பரம் நேசம் மிகுந்தவைகளாகவும் வாழ அருள் புரிய வேண்டுகிறோம
அத்யவோச த்தி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்
அஹிம்ச ஸ்ர்வான் ஜம்பயன்த் ஸ்ர்வாச்ச யாது தான்யா:
  அனைத்துலகிற்கும் முதல்வரும் தேவர்களின் தெய்வமும் பிறவிப்பிணிக்கு வைத்தியரும் பக்தர்களின் குறைகளை மறந்து குணத்தைக்கொண்டாடுபவருமான பரமேஸ்வரன் பாம்பு முதலான எல்லா துஷ்ட ஜந்துக்களையும் பேய் பிசாசு போன்ற துஷ்ட அரக்கர்களையும் அழித்து எங்களைக்காக்காட்டும்  [1  .6]
 


தினம் ஒரு திருமுறை   4
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக்கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்
நற்றுணையாவது நாதன் நாம்ம் நமசிவாயவே
       நமசிவாயப்பத்து  திருநாவுக்கரசர்

தினம் ஒரு ஸ்லோகம்   4
ஷடான்னம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய சுனும் சூரலோக நாதம்
ப்ரம்மண்ய தேவம் சரனம் ப்ரபத்யே
            ஸ்ரீ சுப்ரம்மண்யஸ்வமி ஸ்தோத்ரம்

Thursday, November 29, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  4
ஸ்ரீ ருத்ரம் பதினொறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் அனுவாகங்கள் எனப்படுகின்றன.
  முதல் அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரர் தன்னுடைய கோர ரூபத்தை சாந்தமாக மாற்றிக்கொள்ளவும் அவருடைய ஆயுதங்களை தள்ளி வைக்கவும் வேண்டப்படுகிறார் அவர் சாந்தமடைந்தபின் இம்மந்திரம் யாரால் ஜபிக்கப்படுகிறதொ அவர்களது பாபங்களை அழிக்குமாறும் வேண்டப்படுகிறார்
  முதல் அனுவாகம் எல்லாப்பாபங்களை அழிக்கவும்,தலைமைபதவியடையவும் இறையருள் பெறவும் பஞ்சத்திலிருந்து பாதுகாக்கப்படவும்,பயம் போக்கப்படவும், ஆநிறைகள் பெறவும் மரணம் புலி திருடர்கள்,பேய்கள் தீயசக்திகள் போன்றவைகளின் மீது பயம் போக்கவும் வேண்டப்படுகிறது மேலும் அது வியாதிகளினின்றும் காக்கும் கவசமகவும்,கோள்களின் தோஷங்களை நீக்குவதகவும்,தீய கர்ம வினைகளைப்போக்குவதாகவும் வளமான வாழ்வும் சிறந்த மக்களை அடையவும், எல்லா செல்வங்களை அடையவும் எதிரிகளை அழிக்கவும் உத்வுகிறது
  இப்போது ஸ்ரீ ருத்ரத்தின் முதல் அனுவாகத்திலிருந்து ஆரம்பிப்போம்

ஓம் நமோ பவதே ருத்ராய
நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நமஹ
நமஸ்தே அஸ்து தவனே பாகுப்யாம் முததே நமஹ
  ஓ ருத்ர தேவரே தங்களுடைய கோபத்துக்கும் பாணங்களுக்கும் வில்லிற்கும் இரு கரங்களுக்கும் என் வணக்கங்கள்
யாத இஷு சிவதமா சிவம் ப்பூவ தே தனுஹூ
சிவம் சரவ்யா ய தவ தயா நோ ருத்ர ம்ருடய
  ஓ ருத்ர தேவரே தங்களுடைய கோபத்தை விடுத்துப் புனிதமடைந்த தங்களுடைய வில் பாணங்கள் மற்றும் அம்பராதுணி இவைகளின் வயிலாக எங்களுக்கு மகிழ்வளியுங்கள்
யாதே ருத்ர சிவா தனூரகோரா பாபஹாஷினி
தயா நஸ்தனூவ சாந்தமயா கிரிஷந்தா பிசாஹஷிகி     6
  ஓ ருத்ரரே தங்களுடைய கோரமில்லாததும் எங்களுக்கு துன்பம் தராததும் மிகப் புனிதமானதும் இன்பம் அளிக்கத்தக்கதுமான் தங்களின் ரூபத்தின் வாயிலாக எங்களுக்கு ஒளி காட்டி வழி நட்த்திச்செல்லுங்கள்

  இந்த ஸ்ரீ ருத்ரத்தின் முதல் அனுவாகத்தின் ஆறு வரிகளையும் இன்று கற்றுக்கொள்ளுங்கள் ஈசனருள் பெறுங்கள்



தினம் ஒரு திருமுறை   4
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளிமின்னும்
தவனச் சடைமுடித்தாமரையானே
                                                  திரு மந்திரம்


தினம் ஒரு ஸ்லோகம்   4
த்த் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹீ
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

                                            ஸ்ரீ சிவ் காயத்ரி

Wednesday, November 28, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  3
சிவன் ஆதிமூலமான்வர் அவரே சகல கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் மூலாதாரமானவர் ஒரு பெரிய் மரத்தின் வேரிலே தண்ணீர் ஊற்றும் போது அது அதன் கிளைகள் இலைகள் காய் கனிகள் என்று எல்லா இடமும் பரவுவதுபோல் நாம் ஈசனுக்களிக்கும் பிரார்த்தனை எல்லாக்கடவுள்களையும் சென்றடைகிறது ப்ரதோஷ வேளையிலே சகல கடவுள்களும் தேவ்ர்களும் ஈசனைத் தரிசிப்பதற்காக சென்றுவிடுவதால் ப்ரதோஷ நேரத்தில் சிவனை வழிப்டும்போது அந்தப்பிரார்த்தனை சகல கடவுள்களையும் சென்றடைகின்றது.பல கோயில்களில் ப்ரதோஷ காலங்களில் சன்னிதி மூடியிருப்பதன் காரணம் இதுவேயாகும்
சிவபிரார்த்தனைகளில் மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
இது பல ஜன்ம பாபங்களையும் போக்கவல்லது
வேதத் துதிகளிலே மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லப்படுள்ள முக்கியமான் மந்திரங்களாவன
1.      த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
   உருவாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
  இது ம்ருத்யுஞ்சய மஹா மந்திரம் எமனை வென்று எம பயம் போக்கவல்லது
2 நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய       த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய       நீலகண்டாய ம்ரித்யுஞ்ஜயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவய நமஹ
  இது ஈசனின் பலரூபங்களையும் பெருமைகளையும் சொல்லும் ஸ்லோகமாகும்
ஓம் நமசிவாய
   இதுவே பஞ்சாக்ஷரி மந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஈசனின் ஸ்வரூபம் என்றெல்லாம் அழைக்கப்புடும் அதி உன்னதாமான மந்திரமாகும்
  பஞ்சாக்ஷரத்துக்கு மிஞ்சிய மந்திரம் வேறொன்றுமில்லை
பஞ்சாக்ஷரத்தால் ஈசன் மகிழ்வார்.சடாக்ஷரத்தால்[சரவனபவா] அவர் மைந்தன் முருகன் மகிழ்வார் அஷ்டாசரத்தால்[நமோ நாராயணாய] அவர் மைத்துனர் பெருமாள் மகிழ்வார்
  இதையே ஞானசம்பந்தப்பெருமானார் வந்த கூற்று அஞ்ச உதைத்தன் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்துபதிகத்திலே கூறுவார் மார்கண்டேயரை எமன் பாசக்கயிறு வீசிப் பிடிக்கவந்தபோது அவர் நமசிவய என்ற பஞ்சாக்ஷரி மந்திரத்தை சொன்ன மாத்திரத்தில் அந்த கூற்றுவன் அஞ்சுமாறு ஈசன் எமனை உதைத்தார் என்று சொல்லுகிறது
  இத்தகைய பெருமை வாய்ந்த இந்த பஞ்சாக்ஷரி மந்திரம் வருவது ஸ்ரீ ருத்ரத்தில் தான் ஓம் நமசிவாய நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அது ஸ்ரீ ருத்ரத்திலிருந்துதன் வந்த்து என்பது எத்தனை பேருக்குத்தெரியும்
  அய்ம் மே ஹஸ்தெ பகவான் அயம் மே பஹவத்ர
  அயம் மே விஷ்வ பேஷஜே அயம் சிவா விமர்சின

இதிலே பக்தனுடைய கை கடவுளுக்கு இணையானது அது இறைவனிலும் மேலானது உலகின் சகல் ஜீவன்களின் வியாதிகளுக்கும் மருந்தானது                          ஏனென்றால் இந்தக்கை சிவனை வன்ங்குகிறது என்று சொல்லுகிறது
சிவனை வணங்குகின்ற ஒரே காரணத்துக்காக சிவபக்தனின் கை கடவுளாகவு அதற்கு மேலும் சகலவியாதிகளுக்கும் மருந்தாகவுமாகிறது என்றால் சிவ வழிபாட்டின் பெருமையை சொல்லவும் முடியுமோ
  இத்தகைய சிறப்புடைய ஸ்லோகங்கள் எல்லாம் ஸ்ரீ ருத்ரத்தில்தான் வருகின்றன

தினம் ஒரு திருமுறை  2
சொற்றுணை வேதியன் ஜோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொறுந்தக்கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்சினும்            நற்றுணையாவது நமசிவாயவே   


இன்றைய ஸ்லோகம்   2

கஜாணனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்போ பலசார ப்க்ஷிதம்
உமா சுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக் ணேஸ்வர பாதபங்கஜம்

Monday, November 26, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  2
ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கடங்காத்து வேதம் சொல்லி துதிக்கும் போது அவன் அனைத்தையும் அருள்கிறான் ஈசன் எங்கெல்லாம் எந்தெந்தெந்த வடிவங்களில் எல்லாம் இருக்கிறார் என்பதை அழகாச்சொல்லுகிறது ஸ்ரீ ருத்ரம்
 சகல உலகமும் அவரே என்பதை  ஜெகதாம் பத்யே என்ற வாஸ்கம் சொல்லுகிறது
 சகல தேவர்களின் இருதயங்களிலும் அவரே உறைகிறார் என்பதை
தேவானாம் ஹிருதயேப்ய என்றும்
 வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவர் என்பதை விசின்வத்கேப்யஹா என்றும்
மகான்கள்வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும்விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள்எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்சஎன்கிறதுருத்ரம்அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்(க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர்வடிவிலும் (குலாலேப்ய:கருமார்வேடத்திலும்(கர்மாறேப்ய:பறவைகளைப் பிடிக்கும் வேடர்வடிவத்திலும்புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவவடிவிலும்நிஷாதேப்ய:) இருக்கிறான்.


சிவ ச்வரூபமோ அலாதியானதுஆலகால விஷத்தைஉண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டுஇருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்டஜடா முடி (கபர்தினே) இருக்கிறதுமறு கணம் பார்த்தால்கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாயதலை.ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகியவாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்சஅவனே ,பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதேதோன்றுகிறான்பாலவிருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்வேதங்களால்துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாயவேத முடிவில்வீற்றிருப்பவனாகவும்அவசான்யாயவிளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது. 
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள்.
நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ  பூஜை செய்பவன் சிவனாகவே  ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை,  நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது.

       இன்னும் ஸ்ரீ ருத்ரத்தின் மஹிமையை சொல்லிக்கொண்டே போகலாம்
இதையே நான் ஈசனருளால் என்னால் முடிந்தவரையில் எளியோர்கள் புறிந்துகொள்ளும் வகையில் தர ஈசன் அருள்வேண்டித்துவங்குகிறேன்