Friday, November 30, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி   5
யாமிஷும் கிரிஷந்த ஹஸ்தே பிபர்ஷ்ய ஸ்தவே
சிவாம் க்ரித்ரதாம் குருமா ஹிம்ஹ்சீ புருஷஞ்சகத்
  கயிலை மலியிலிருந்துகொண்டு உலகிற்கு இன்பத்தைக் காட்டுபவ்ரே.கயிலைமலையிலிருந்த்கொண்டு சரணடைந்தோரை ரக்ஷிப்பவரே பாபிகள் மேல் பிரயோகிப்பத்ற்காக தங்கள் கையிலுள்ள பாணத்தை சாந்தமாக்குங்கள் அதைக்கொண்டு மக்களையும் உலகத்தையும் துன்புறச்செய்ய வேண்டாம்
சிவேன வசசா த்வா கிரி சாச்சா வதாமசி
யதா ந: சர்வம் இஜ்ஜக தய்க்ஷ்மம் சுமனா அஸத்து
  கயிலை மலையில் உறைபவரே தங்களை அடைவதற்கு மங்களகரமான ஸ்துதி வசனகளால் போற்றுகிறோம்.எங்களைச் சார்ந்த உறவினர்களும் ஆவின்ங்களும் நோயற்றவைகளாகவும் பரஸ்பரம் நேசம் மிகுந்தவைகளாகவும் வாழ அருள் புரிய வேண்டுகிறோம
அத்யவோச த்தி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்
அஹிம்ச ஸ்ர்வான் ஜம்பயன்த் ஸ்ர்வாச்ச யாது தான்யா:
  அனைத்துலகிற்கும் முதல்வரும் தேவர்களின் தெய்வமும் பிறவிப்பிணிக்கு வைத்தியரும் பக்தர்களின் குறைகளை மறந்து குணத்தைக்கொண்டாடுபவருமான பரமேஸ்வரன் பாம்பு முதலான எல்லா துஷ்ட ஜந்துக்களையும் பேய் பிசாசு போன்ற துஷ்ட அரக்கர்களையும் அழித்து எங்களைக்காக்காட்டும்  [1  .6]
 

No comments:

Post a Comment