Wednesday, December 28, 2011


நோய்தீர்க்கும் ஸ்லோகம்
வைத்யனாதாஷ்டகம்

   சிவன் வைத்யனாதன் ஆவார். ஏனெனில் சகல வியாதிகளுக்கும் அவரே நிவாரணியாவார்.எல்லா வைத்தியர்களுக்கும் அவர் தலைவனாவார் அதனாலாயே அவர் வைத்யனாதன் என்று அழைக்கப்படுகின்றார்.

   வைத்தியர் மருந்து மட்டுமே கொடுக்கின்றார் ஆனால் இறைவனே குணப்படுத்துகின்றார் இதையே
   DOCTOR TREATS AND GOD CURES
  என்று சொல்லுகின்றோம்.
 ஒரு மருத்துவர் ஒரே நோய்க்கு இரு நோயாளிகளுக்கு ஒரே வித வைத்தியம் செய்தாலும் ஒருவர் உடனே குணமடைகின்றார் ஆனால் மற்றொருவர் குணமடைவதில்லை.ஆக மருத்துவத்துக்கும் மேற்பட்ட ஒன்று இருக்கின்றது அதுதான் இறையருள்.அந்த இறையருள் இருந்தால் மருத்துவரின் வைத்தியம் உடனடியாக பலன் அளீக்கின்றது அது இல்லாதவற்கு பலனளிப்பது இல்லை

  அந்த இறையருள் பெற நமக்குள்ள பொக்கிஷம்தான் வைத்ய நாதாஷ்டகம். இதிலே அமைந்துள்ள எட்டு ஸ்லோகங்களும் உன்னதமானவை.அவைகளை தினம் படிப்பதனால் எல்லாவித நோய்களிலிருந்தும் அதிவிறைவில் குணமடைய முடியும் என்பது உறுதி.

  வைத்யநாதாஷ்டாகத்திலே அமைந்துள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வைரமாகும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் மஹாதேவ மஹாதேவ என்று பதினாறு முறை சொல்லவேண்டும் இதன்படி இந்த அஷ்டகத்தைச்சொல்லிமுடிக்கும்போது மஹாதேவ என்று 144 முறைகள் சொல்லி இருப்போம்

  நம்முடைய பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ ஏதேனும் நோய் வந்தால் அது உடனடியாக நிவாரணம் ஆக எட்டாவது ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்
   நீல கண்டாய ரிஷபத்வஜாய
   ஸ்ரக்கந்த பத்மோத்ய பிசோபிதாய
   சுபுத்ரதாராதி சுபாக்யதாய
   ஸ்ரீவைத்யனாதாய நமசிவாய
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

  இதிலே வரும் சுபுத்ரதாராதி என்பது பிள்ளைகளையும் அவர்களைச்சேர்ந்தவர்களையும் குறிக்கின்றது பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ உடல் நலக்க்றைவு ஏற்படும்போது இந்த
ஸ்லோகம் நல்லதொரு நிவாரணியாகும்

ஓம் நமசிவாய

Tuesday, December 27, 2011


இறைவனை அடையும்வழிகள்

இறைவனை அடையும் வழிகள் ஒன்பதாகும்.அவைகள்

1. ஸ்ரவணம்   கேட்டல்    இறைவன் புகழைக்கேட்பதன் மூலம்
     அவனை அடைதல்   ஹனுமான்
2. கீர்த்தனம்  பாடல் மூலம் அவனை அடைதல்
      தியாகேசர்  வால்மீகி
3. ஸ்மரணம்  மனதால் நினைத்தல்  அவனையே எப்போதும்
      அவனையே நினைத்திருந்து அவனை அடைதல் சீதை
4. பாதசேவனம்  பாதங்களைப் பணிதல் பரதன்
5. அர்ச்சணம்  பூஜித்தல்   சபரி  கண்ணப்பர் மற்றும் பலர்
6. வந்தனம்  வணங்கி பூஜித்தல்  விபீஷணன்
7. தாஸ்யம்  தொண்டு செய்தல்  லக்ஷ்மணன் நாவுக்கரசர்
8. சக்யம்  ஸ்னேகபாவம்   அர்ஜுனன்  சுந்தரர்
9. ஆத்ம நிவேதனம்  தன்னையே அர்ப்பணித்தல்  ஜடாயூ

  இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றைப் பற்றுவதே இறைவனை
  அடைவதற்கான வழியாகும்

Tuesday, December 20, 2011


சனிப்பெயர்ச்சி

   ஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு ராசிகளீல் சஞ்சாரிக்கின்றன.ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சாரம் செய்தபின் அடுத்த ராசிக்கு மாறுவதையே கிரகப்பெயர்ச்சி என்று சொல்லுகிறோம் அவ்வாறாக சனிக்கிரகம்
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தபின் அடுத்த கிரகத்துக்கு பெயர்கிரது. எனவே சனிக்ரகத்தின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளுகு ஒரு முறை நிகழ்கிறது. தற்போது சமீபத்தில் சனிப்பெயற்சி நிகழ இருக்கின்றது

ஈஸ்வரன்

  ஈஸ்வரன் என்றதும் நம் நினைவுக்கு வருபவ்ர் சர்வேஸ்வரனான சிவபெருமான்தான் சிவனைத்தவிர ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் நான்கு பேர்கள் மட்டுமே  அவர்கள்

   1. சிவபெருமான்         சர்வேஸ்வரன்
   2  கணபதி              விக்ணேஸ்வரன்
   3  சனிகிரகம்            சனீஸ்வரன்
   4  ராவனன்             இலங்கேஸ்வரன்
   5  கோடிபெற்றவன்      கோடீஸ்வரன்

  இதிலே சிவனும்  கனபதியும்  கடவுள்கள்
இராவணேஸ்வரன் அபரிமிதமான சிவபக்தி கொண்டவன்
முறையன வழியிலே கோடிகள் சம்பாத்தவர்கள். கோடீஸ்வரர்கள்
ஒன்பது கிரகங்களிலும் சிறப்பு பெற்றவர் என்பதால் சனிகிரகத்துக்கு சனீஸ்வரன் என்ற பட்டம் உண்டு

  பொதுவாகவே சனீஸ்வரன் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.அதிலும் ஏழரை நாட்டு சனி என்றாலோ அல்லது அஷ்டமத்தில் சனி என்றாலோ பயப்படாதவர்களே இல்லை..சனியின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளாகும் ஏழரை நாட்டு சனியின்போது முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனியாகும் அடுத்த இரண்டரையாண்டுகள் ஜன்மச்சனியாகும்  கடைசி இரண்டரையாண்டுகள் பாதச்சனியாகும்

  சனீஸ்வரனால் பாதிப்பும் சங்கடங்களுக்கும் உள்ளாபவர்கள் உள்ளன்போடும் பக்தியோடும் சனீஸ்வரனையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.எந்தக்கடவுளும் அல்லது எந்த கிரகமும் பக்தர்களுக்கு துன்பம் உண்டு பண்ணுவதில்லை, அவரவ்ர்களின் கர்மவினைகளே பலன்களாக வருகின்றன அவைகளை ஈசனின் அருள் மூலம் முழுமையாக வெல்லமுடியும்.
    இதைத்தான் கோளறுபதிகம் சொல்லுகின்றது அதிலே ஞானசம்பந்தர் பத்து அழகான பதிகங்களில் ஒன்பது கிரஹங்களும் எவ்வாறு நன்மையை மட்டுமே தருகின்றவையாக அமையமுடியும் என்று விளக்குகின்றார்.ஒவ்வொரு பாட்டின் முடிவிலும்
  நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல அடியார் அவற்கு மிகவே
என்று முடிக்கின்றார்

  பதினோறாவது பாடலிலே
   தானுறு கோளும் நாளும் வந்து அடியாரை நலியாத வண்ணம்
   உரைசெய் ஆனமாலை ஓதும் அடியார்கள் வானில்
   அரசாள்வார் ஆணை நமதே
என்று ஆணையிட்டுச்சொல்லுகின்றார்.

எனவே ஈஸ்வரனின் அருள் பெற்றோர்க்கு எல்லா கிரகங்களும் எல்லாக் காலங்களிலும் நல்லவையாகவே அமையும்.அவை எந்த தீமையும் செய்யா.எனவே தினமும் கோளறுபத்கம் படித்து ஈசனருள் பெற்று எல்லாக்கோள்களின் நல்லருளையும் பெறுங்கள்

வேயுருதோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை
முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

  இந்த முதல் பாடலையும் அதைத்தொடர்ந்து வரும் மற்ற ஒன்பது பாடல்களையும் தினமும் ஈசன் முன் ஓதி அவனருள் பெற்று எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று உய்வோம்


ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்


  

Sunday, December 18, 2011


விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானம் எப்படி உண்மையோ மெய்ஞ்ஞானமும் அப்படியே உண்மையாகும்.
விஞ்ஞானத்தின் முடிவே மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பமாகும
வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு மெய்ஞ்ஞானம் உட்பொருளைத்தருகின்றது.

விஞ்ஞானத்தில் உடலும் செயலும் ஒரு பொருளை ஆராய்கின்றன அதற்கு வடிவம் உண்டு.ஆனால் மெய்ஞ்ஞான
உண்மைகளை உணர்வாலும் ஆத்மாவினாலும் உணர்ந்துதான் அறியமுடியும் ஏனெனில் அவைகளுக்கு உருவம் கிடையாது.
ரோஜா மலரைக்கண்டு அதன் அழகை ரசிக்கின்றோம். அதன் வண்ணத்தை வார்த்தைகளால் விளக்குகின்றோம்.
ரோஜா மலரின் இனிய மனம் மயக்குகின்ற மணத்தை உணர்ந்து
ரசித்து மகிழ்கின்றோம் .ஆனால் அந்த மணம் எப்படி இருக்கின்றது என்று நம்மால் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதுபோலத்
தான் மெய்ஞ்ஞான உண்மைகளை உணர மட்டுமே முடியும்.

மேலே தூக்கி எரியப்பட்ட பொருள் கீழேவிழும் என்பது விஞ்ஞான உண்மை இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அது
ஏன் கீழே விழுகிறது என்றால் புவியீர்ப்பு என்று எல்லோரும் சொல்வோம் உண்மையும் அதுதான்.ஆனால் அந்த புவியீர்ப்பு
GRAVITATION எப்படி இருகும் என்று யாராலும் விளக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

ஆனால் மேலே தூக்கி எரிந்த பொருள் கீழே விழுவதும் அதற்கு புவியீர்ப்புதான் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அந்த இரண்டுமே என்றுடன் ஒன்று கலந்து விளங்குபவை.
உலகிலே அனைத்துமே இரண்டிரண்டாகதான் இயங்குகின்றன
ACTION  REACTION
நன்மை  தீமை
இரவு    பகல்
வெப்பம்     குளிர்ச்சி
ஆண்        பெண்
இளமை     முதுமை

என்று சொல்லிக்கொண்டே போகலாம்
எனவே ஒரு வட்டத்திலே 360 ட்கிரியும்  0 டிகிரியும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது போல் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே இடத்திலிருந்துதான் இயங்குகின்றன

Thursday, December 15, 2011


BACK PAIN  முதுகு வலி

வாழ்க்கையில் முதுகு வலி வராதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக முதுகுவலிஎன்பது கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்புப்பகுதிவரையில் எங்கு வேண்டு
மானாலும் வரலாம். அதன் தன்மையும் பொறுக்கமுடியாத வலி முதல் மிதமான வலியாக அமையலாம்  ஆனால் எப்படியிருந்தாலும் முதுகுவலி என்பது ஒரு பிரச்சினைதான்

 CAUSES

The causes for back pain are so many
1.    some times it may be due to a life time bad habit
2.    Accidents
3.    Muscle strain and Sports injuries
4.    At times the cause is not known
5.    Diseases of the joints muscles and nerves
6.    Aging
7.    Calcium deficiency
8.    We can go on enumerating the causes

 SYMPTOMS

  Whatever be the cause the symptoms of Back pain are the same
1.      Persistent ache or stiffness along your spine
2.      Sharp and localized pain in the neck upper middle or lower back especially after some straining like bending and lifting
3.      Chronic back pain in the middle and lower back especially after sitting or standing for a long time
4.      Pain that radiates (moves) from the back to the buttocks thighs calf and toes
5.      Inability to stand without severe muscle spasm and support

WARNING SIGNS

1.       With back pain if you have NUMBNESS  TINGLING and LOSS OF CONTROL of movements it may be due to spinal cord disease
2.       When the back pain extends below the thighs it may be due to sciatica
3.       If the pain increases when you cough or laugh or bent forward it may be due to a prolapsed spinal disc
4.       If the pain is accompanied with fever painful urination and lower abdominal pain it may be due to urinary infection
5.       If you have a dull pain while lying or while getting down from the bed it may be due to osteoarthritis a degenerative bone disorder
 THESE ARE SITUATIONS WHEN YOU HAVE TO SEEK IMMEDIATE MEDICAL AID

DIAGNOSIS

Prior to performing complicated and expensive tests the doctor will do certain simple clinical tests like
   Locating the site of pain
   Assessing the range of mobility of the limb
   Functioning of the nerves concerned
1.      Blood and urine tests
2.      X Ray of the back and limbs
3.      C-T Scam
4.      MRI Scan
5.      Electromyogram EMG

TREATMENT

   For milder pain without any serious underlying problem or complication simple measures are sufficient they are

1.      Application of warmth or ice packs
2.      Milder pain relievers like Paracetemol Brufen etc
3.      Long term bed rest is mostly not advised
4.      Controlled and mild exercise is recommended
5.      Physical therapy like message ultrasound and heat
6.      Individualized and tailored exercise programs
7.      Exercises to strengthen the back and abd muscles
8.      Medications are useful to relieve pan but they are also harmful on prolonged usage
9.      Surgery may be needed in needed situations.

REMEMBER EARLY INTERVENTION WILL SAVE YOUR LIFE AND MONEY AND PREVENT SUFFERING AND INCONVENIENCE AND MAKE LIFE HAPPY


 1.

Saturday, December 3, 2011


ஒம் நமசிவாய


சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் அல்லது ஸ்வஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும் ஈசனின் திருவிளையாடல்களும் அறுபத்து நான்காகும் ஈசனின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் தனி வரலாறும் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்துக்கும் தொடர்புடைய ஒரு ஸ்தலம் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்தைப்பற்றி அறியும்போது அதன் தொடர்புடைய வரலாறையும் அந்த ஸ்தலத்தின் பெருமையும் நாம் அறிய முடிகின்றது முதல் வடிவமாக ஈஸ்வரன் இருந்து அருள்வது
லிங்கவடிவமாகும்

1.லிங்கவடிவம்

பரமேஸ்வரன் சகலமுமானவர் மற்றும் சகலத்துக்கும் அப்பார்ப்
பட்டவர்..இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் ஆக்கியவரும் அதைக்
காப்பவரும் அவரே பஞ்ச பூதங்களாக அருள்பவர் அவரே மேலும் ஐம்புலங்களையும் கடந்தவர் மனம் வாக்கு காயம் என்ற மூன்றிற்கும் மேலானவர்
 இவைகளை எல்லாம்விட உருவமாகவும் உருவமற்ற அருவமாகவும் விளங்குபவர் ஈஸ்வரன் எல்லாம் அவரே. ருத்ரம் இதைத்தான் ப்ரபஞ்சத்தில் சகலமும் சிவனே என்று சொல்லுகின்றது இந்த உருவமும் உருவமற்றதுமான நிலையையே நாம் லிங்கம் என்று சொல்லுகின்றோம்

  லிங்கத்தின் மேல் பகுதி சிவரூபமாகும் .அதன் பீடம் சக்தி வடிவமாகும் முழு லிங்கம் சிவசக்த்திஸ்வரூபமாகும் லிங்க வடிவிலேயே ப்ரம்மனும் விஷ்னுவும்கூட அமைந்துள்ளார்கள்
லிங்கத்தின் நடுவே சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே ப்ரம்மனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அமைந்துள்ளார்கள்

    இத்தகைய சிறப்புடைய லிங்கம் எல்லா சிவாலயகளில் இருந்தாலும் மகாலிங்கம் என்ற சிறப்புடன் விளங்குவது
திருவிடைமருதூரில்தான் இங்கு சிவபெருமான் தானே பூஜைக்கு
லிங்கம் அமைத்து பூஜை செய்து பூஜா விதிகளை வகுத்துத்தந்துள்ளார் காவிரி அன்னை இத்தலத்தில் சிவனை
வில்வத்தல் பூஜித்துள்ளாள். இத்தலம் ப்ரம்மஹத்தி தோஷ பரிகார ஸ்தலமாகும் இங்கு ஈஸ்வரனை வில்வம் கொண்டு
அர்ச்சனை செய்து வழிபட்டால் உடலும் மனமும் தூய்மை அடைவதுடன் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடையும்

லிங்கஸ்வரூபமாய் விளங்கும் மகாலிங்க மூர்த்தியை வணங்கி அருள் பெற்றுய்வோம்

Friday, December 2, 2011


சிவ வடிவங்கள் (தொடற்சி)

   சிவ வடிவங்கள் அறுபத்து நான்கில் முதல் 32 வடிவகளை முன்பு குறிப்பிட்டு இருந்தேன் இன்று மீதமுள்ள 32 வடிவங்கள் என்னென்ன என்று பார்ப்போம்


33 யோக தக்ஷினாமூர்த்தி வடிவம்
34 வீணா தக்ஷிணாமூர்த்தி வடிவம்
35 காலந்தக மூர்த்தி வடிவம்
35 காமதகன மூர்த்தி வடிவம
37 இலகுளேஸ்வர மூர்த்தி வடிவம்
38 பைரவ மூர்த்தி வடிவம்
39 ஆபத்தோத்தரண மூர்த்தி வடிவம்
40 வடுக மூர்த்தி வடிவம்
41 க்ஷேத்திரபால மூர்த்தி வடிவம்
42 வீரபத்ர மூர்த்தி வடிவம்
43 அகோரமூர்த்தி வடிவம்
44 தட்சயஞ்யஷதமூர்த்தி வடிவம்
45 கிராதமூர்த்தி வடிவம்
46 குருமூர்த்தி வடிவம்
47 அசுவாருட மூர்த்தி வடிவம்
48 கஜாந்திக மூர்த்தி வடிவம்
49 சலந்தரவத மூர்த்தி வடிவம்
50 ஏகபாதத்ரி மூர்த்தி வடிவம்
51 திரிபாதத்ரிமூர்த்தி வடிவம்
52 ஏகபாதமூர்த்தி வடிவம்
53 கௌரிவரப்ரதமூர்த்தி வடிவம்
54 சக்கரதானமூர்த்தி வடிவம்
55 கௌரிலீலாசமன்விதமூர்த்தி வடிவம்
56 விசாபகரணமூர்த்தி வடிவம்
57 கருடன் அருகிருந்தமூர்த்தி வடிவம்
58 ப்ரம்ம சிரச்சேதமூர்த்தி வடிவம்
59 கூர்மசம்ஹாரமூர்த்தி வடிவம்
60 மச்சசம்ஹாரமூர்த்தி வடிவம்
61 வராகசம்ஹாரமூர்த்தி வடிவம்
62 ப்ரார்த்தனாமூர்த்தி வடிவம்
63 ரத்தபிக்ஷாப்ரதானமூர்த்தி வடிவம்
64 சிஷ்யபாவமூர்த்தி வடிவம்

   இப்போது சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள் எனென்ன என்று பார்த்தோம் இனி  ஒவ்வொரு ஸ்வரூபத்தின் காரணம் முக்கிய ஸ்தலம் வழிபாட்டுப்பலன்கள் பற்றி விரிவாக வரும்  நாட்களில் பார்ப்போம்

Monday, November 28, 2011


சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் அல்லது சிவஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும்
சிவன் உருவமாகவும் அரூவமாகவும் திகழ்பவர். யார் எப்படி அவரை த்யானிக்கின்றார்களோ அந்த வடிவிலேயே காக்ஷி அளிக்கவல்லவர்.
ஆனால் பல நிலைகளில் பல ஸ்தலங்களில் பல காரணங்களுக்காக
அவர் பலப்பல வேடங்கள் கொண்டு அருள் புரிந்துள்ளார்  அவ்வாறு
அவர் மேற்கொண்ட வடிவங்கள் அல்லது ஸ்வரூபங்கள் அறுபத்தி நான்கு. அவரின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு  அந்த வடிவத்தொடு இயைந்த ஸ்தலத்துக்கும் ஒரு பெருமை உண்டு.

அறுபத்து நான்கு சிவஸ்வரூபங்கள்

1 லிங்கமூர்த்தி
2 லிங்கோர்ப்பவ மூர்த்தி
3 முகலிங்க மூர்த்தி
4 சதாசிவ மூர்த்தி
5 மகா சதாசிவ மூர்த்தி
6 உமாமகேச மூர்த்தி
7 சுகாசன மூர்த்தி
8 உமேச மூர்த்தி
9 சோமாஸ்கந்த மூர்த்த
10 சந்திரசேகர மூர்த்தி
11 இடபாரூட மூர்த்தி
12 இடபாந்திக மூர்த்தி
13 புஜங்கலளித மூர்த்தி
14 புஜங்கத்ராச மூர்த்தி
15 சந்த்யான்ருத்த மூர்த்தி
16 சதாநிருத்த மூர்த்தி
17 சண்டதாண்டவ மூர்த்தி
18 கங்காதர மூர்த்தி
19 கங்காவிசர்ஜன மூர்த்தி
20 திரிபுராந்தக மூர்த்தி
21 கல்யாணசுந்தர மூர்த்தி
22 அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
23 கஜயுக்த மூர்த்தி
24 ஜ்வாரபக்ன மூர்த்தி
25 சார்த்தூலஹர மூர்த்தி
26 பாசுபத மூர்த்தி
27 கங்காள மூர்த்தி
28 கேசவார்த்த மூர்த்தி
29 பிக்ஷாடன மூர்த்தி
30 சிம்ஹக்ன மூர்த்தி
31 சடேச அனுக்ரஹ மூர்த்தி
32 தெக்ஷிணா மூர்த்தி

    நாளை மீண்டும் மீதமுள்ள 32 வடிவங்களை அறிவோம்



Saturday, November 26, 2011


RISK FACTORS FOR HEART DISEASE
இதயநோய் உண்டு பண்ணக்கூடியவை

A risk factor is something that will increase the chance of your getting a heart problem In the absence of this factor the chances of your getting a heart disease are less.
Some of the risk factors are under our control and can be changed. But some other factors are not under our control and hence cannot be changed or modified.

RISK FACTORS THAT YOU CANNOT CHANGE

1 AGE            Risk of HD increases with advancing age
2 GENDER        Males are more prone for HD than females
3 GENES         If your parents had a HD you are at a higher risk
4 RACE          Certain races including INDIANS are at a higher risk

RISK FACTORS YOU CAN CHANGE

1 SMOKING          If you are a smoker stop it immediately
2 CHOLESTROL       Cholesterols are the main direct cause of HD.You must
                       keep your cholesterol under strict control
3 BLOOD PRESSURE  If you have high BP keep under strict control by diet
                       exercise and medicines
4 DIABETES          Diabetes is the worst culprit Keep it under control
5 EXERCISE          Daily exercise is a must to avoid getting HD
6 DIET              Your diet must take a low fat high protein and high
                    fiber diet
7 WEIGHT           You must maintain an optimum eight Most of us are
over weight persons Maintanng an optimal weight
will reduce the risk of HD

8 STRESS           In these days mental stress is an important factor for
                   HD Stess reduction and management is important
9 ALCOHAL          Alcohal should be limited If you can stop drinking

Now knowing the risk factors for heart disease it is only in our hands to prevent it Because most of the risk factors are controllable
Let us adhere to them and live a long healthy and happy life

Friday, November 25, 2011


உங்கள் நெஞ்சு வலி  இருதயவலியா

  நெஞ்சுவலி என்றவுடன் நாம் எல்லொரும் நினைப்பது இருதயத்தைத்தான்.எத்தனையோ வலிகள் வந்தாலும் நெஞ்சுவலி என்றவுடன் நமக்கு அளவில்லாதபயம் உண்டாகின்றது.
நெஞ்சுவலி என்பது நாம் பயப்பட வேண்டிய ஒன்றுதான்
ஆனால் எல்லா நெஞ்சுவலியும் இருதய வலியா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்..
நெஞ்சுவலியிலே இரண்டு வகைகள் உண்டு
1 இதயம் சார்ந்த நெஞ்சுவலி     CARDIAC(HEART) PAIN
2.இதயம் சாரா நெஞ்சுவலி        NONCARDIAC PAIN
   இதயம் சாரா நெஞ்சுவலி பல காரணங்களால் வரலாம்.
நாம் இன்று இதயம் சார்ந்த நெஞ்சுவலியின் தன்மைகளைப் பற்றி
தெரிந்துகொள்ளுவோம் .இருதய வலி என்பது ஒரு அபாய சங்கு ஆகும் .அதை சரியாகக்கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான மருத்துவம் செய்தால் உடல் உபாதைகளையும் உயிர் இழப்பையும் தடுக்கலாம்.நெஞ்சுவலியின் சரியான காரணத்தை முறையான மருத்துவர்தான் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாலும் நாமும் முன்னெச்சரிக்கையுடன் செயல் பட்டால்தான் மோசமான பின் விளைவுகளைத் தவிற்கமுடியும்.

இதயவலியின் தன்மைகள்

1 இடம்  
      இதயவலி மார்பின் நடுப்பகுதி (தொண்டக்குழியிலிருந்து மேல்வயிறு வரையிலானபகுதி) இடது மார்புப்பகுதி இடது தோள் மற்றும் இடது மேற்கை இடது தாடைப்பகுதி இடது முதுகின் மேற்பகுதி நடு வயிற்றின் மேற்பகுதி மற்றும் சில வேளைகளில்
வலது பகுதிகளிலும் வரலாம்.
     பொதுவாக இதயவலி பரவலானதாகவே இருக்கும்.எங்கே வலிக்கிறது என்னும்போது உள்ளங்கை முழுவதையும் வைத்துக்காட்டினால் அது இதய வலியாக இருக்கலாம் ஆனால்
ஒரு விரலால் ஒரு புள்ளியில் வலி என்றால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

2 வலியின் தன்மை

      இதயவலி பொதுவாக ஒரு பாராங்கல்லை வைத்து மார்பிலே அழுத்துவது போலிருக்கும் .சிலருக்கு SHARP PAIN என்று சொல்லக்கூடிய பளிச் என்ற வலியிருக்கும் பல நேரங்களில் எரிச்சல் மட்டுமே இருக்கும் மற்றும் சிலருக்கு நெஞ்சில் ஒரு இனம்புரியாத உணர்வு CHEST DISCOMFORT AND UNEASINESS மட்டும் இருகும்
    இந்த வகையான குறிகள் இதயசாரா நோய்களிலும் வரலாம்
உதாரணமாக குடல் மற்றும் இறைப்பை நோய்களிலும் நடுவயிற்றின் மேற்பகுத்யில் வலி வரலாம் அவகளை பாகுபடுத்தி உண்மையான காரணத்தை அறியவேண்டியது அவசியம்.

3 நேரம்   DURATION

    பொதுவாக இதயவலி நீண்ட நேரம் தொடற்சியாக இருக்காது. பல வேளைகளில் விட்டு விட்டே வரும். நாள் பூராவும் தொடர்ந்து வலி இருந்தால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை.
  ஆனால் மிக மோசமான மாரடைப்பு (MAJOR HEART ATTACK)
போன்ற சமயங்களில் தொடர்ந்து வலி இருக்க வாய்ப்புண்டு

4 பரவுதல்   RADIATION

   இதயவலி பொதுவாக அது வருகின்ற பகுதியில் மட்டும் நிற்பதில்லை. நெஞ்சிலிருந்து அது சில இடங்களுக்கு பரவும்
நெஞ்சிலிருந்து இடது தோள் புஜம் தாடை நெஞ்சுக்குழி முதுகு
ஆகிய இடங்களுக்கு வலி பரவலாம்
5 எதனால் வருகிறது   WHAT BRINGS THE PAIN

    பொதுவாக சாதாரண நிலைகளில் வலி வருவதில்லை.
அதிகமான உடல் உழைப்பு (EXERTION) மனச்சோர்வு (DEPRESSION)
மன அழுத்தம் (ANXIETY) TENSION அளவுக்கு அதிகமான உணவு
மாறுபட்ட வெப்ப நிலைகள் போன்றவைகள் இதயவலியை உண்டாக்கக்கூடியவை

6 எப்படிப்போகிறது     WHAT RELIEVES THE PAIN

    நெஞ்சுவலி வந்தவுடன் நாம் செய்கின்ற செயலை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் வலி நின்றுவிட்டால் அது இதயவலியாகும்.PAIN RELIEVED BY REST
   நாக்கின் அடியில் வைக்கும் NITRATE மாத்திரைகள் வைத்து வலி நின்றால் அது இதயவலியாகும்
   அமைதியான சூழலில் வலி நின்றால் அது இதய வலியாக இருக்கலாம்
    இவைகள் எல்லாம் செய்த பின்னும் வலி தொடர்ந்திருந்தால்
அது அனேகமாக இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

உடனான குறிகள்   ASSOCIATED SYMPTOMS

    நெஞ்சுவலி இதயவலியாக இருந்தால் அதனுடன் கீழ்க்கண்ட குறிகளும் காணப்படும்
    அளவில்லா வியர்வை EXCESSIVE SWEATING
    தலைசுற்றல்          GIDDINESS
    மயக்கம்              DIZZINESS
    மூச்சுத்திணரல்       BREATHLESSNESS  (DYSPNOEA)
    வாந்தி               VOMITING
    படபடப்பு             PALPITATION
    நினைவிழப்பு         UNCONSCIOUSNESS

நான் குறிப்ப்ட்டுள்ள செய்திகளை மனதில் கொண்டு நாம் வரும் நெஞ்சுவலியின் தன்மையை உணர முடியும்
இருந்தாலும் உண்மையான சரியான கணிப்பை (DIAGNOSIS) ஒரு
மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் எனவே இந்த உண்மைகளை உங்களின் தெரிந்துகொள்ளுதலுக்காகவே கொடுத்துள்ளேன் (FOR YOUR KNOWLEDGE AND INFORMATION)
உண்மையான நெஞ்சுவலியின் தன்மையை கண்டறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டியவர் உங்கள் மருத்துவர் மட்டுமே என்பதை மறவாதீர்கள்
   


Thursday, November 24, 2011


அபிஷேகப்பலன்கள்

சிவன் அபிஷேகப்பிரியர். ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு அவர் தலையிலே ஊற்றினாலே அளவில்லா ஆனந்தம் அடைபவர்.
நெகிழ்ந்த மனத்தோடு எல்லாப்பொருட்களைக்கொண்டும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் .ஷோடேச அபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற பதினாறு அபிஷேகங்கள் சிறப்புடயவை
ஆனால் எல்லோராலும் எல்லானாட்களிலும் பதினாறு அபிஷேகங்கள் செய்யமுடியுமா என்பது இயலாமல் இருக்கலாம்
ஆனால் சுத்தமா மனத்துடன் தூயனீரைக்கொண்டு அபிஷித்தாலே ஈசன் மனம் மகிழ்வார்
 
   அபிஷேகம் செய்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்
சிறப்பும் மகோத்வமும் இருகின்றன.அவை என்னவென்று பார்ப்போம்

1  தண்ணீர்                     ஈசனருள்
2  பால்                         நீண்ட ஆயுள்
3  தயிர்                        நல்ல மக்கட்ச்செல்வம்
4  நெய்                         மோக்ஷம்
5  தேன்                        இனிய குரல் வளம்
6  அரிசி மாவு                  கடன் இல்லாமை
7  கரும்புச்சாறு                 நோயின்மை
8  பஞ்சாமிர்தம்                 அளவில்லா செல்வம்
9  எலுமிச்சை சாறு             எமபயம் போக்கும்
10 சர்க்கரை                     பகைமையைப்போக்கும்
11 இளனீர்                      இன்பமயமான வாழ்க்கை
12 அன்னம்                     பீடுடைய வாழ்க்கை
13 எண்ணெய்                   சலனமில்லாமை
14 மஞ்சள்                      லக்ஷ்மி கடாக்ஷம்
15 சந்தனம்                     சகல சௌபாக்யம்
16 விபூதி                       ஈஸ்வரனின் பாதாரவிந்தம்

  இந்த பதினாறு திரவியங்களாலும் ஈசனை அபிஷேகித்து வணங்கி அவன் அருளைப் பெறலாம்
 
  பொருளளால் அபிஷேகிக்கும்போது பொருட்பலங்களை அவர் தருகிறார்
                     ஆனால்
  ஈஸ்வரனை அன்பால் அபிஷேகம் செய்தால் அவர் தன்னையே தருவார்

ஓம் நமசிவாய

Tuesday, November 22, 2011


இதய நோயின் முக்கியமான அறிகுறிகள்

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு அதிகமான பாதிப்புகளையும் மரணத்தையும் உண்டாக்குகின்ற நோய்களில்
முன்னணியில் இருப்பது இருதய நோயாகும் .இதற்கு முக்கிய காரணம் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி மக்களின் அறியாமையேயாகும் .பல நேரங்களில் இருதய
நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதனாலேயே மரனம்
ஏற்படுகின்றது. என்வே அனைவரும் இருதய நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்

1 நெஞ்சு வலி
   இருதய நோயின் ப்ரதான அறிகுறி நெஞ்சு வலியாகும் இது மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது சற்று இடப்புறமாகவோ இருக்கும் .நெஞ்சின்மீது ஒரு பாராங்கல்லைத் தூக்கி வைத்ததுபோல் இருக்கும். சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம் பலருக்கு நெஞ்சு வலி ஒரு சிறிய நெருடல் (DISCOMFORT) போல இருக்கும்.
   இந்த வலி இடது தோள் இடது கை வயிற்றின் மேல் பகுதி
தாடை சில நேரங்களில் வலப்புற மார்பிலும் உணரப்படும். .பொதுவாக இருதய வலி STRAIN மூலமாகவும் உடல் வருந்த வேல செய்வதாலும் உண்டாகும். ஓய்வெடுத்தால் உடன் வலி நின்றுவிடும்.
   பல நேரங்களில் இந்த வலி வய்ற்றுக் கோளாரினாலோ அல்லது அஜீரணத்தினாலோ உண்டானதென தவறாக எண்ணப்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. என்வே நெஞ்சு வலியை அல்ட்சியப்படுத்தாதீர்கள்

2 மூச்சுத்திணறல்
   இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மூச்சுத்திணறல் சுவாச நோய்கள் காரணமாக வரலாம் அல்லது இருதய நோய் காரணமாகவும் வரலாம்.அவைகளை சரியாக வேறுபடுத்தி அறிந்தால்தான் முறையான் சிக்ச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும

இருமல்

   இருமல் ஒரு சாதாரண அறிகுறியாகத் தோன்றினாலும் இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். பல காரணங்களாலும் நோய்களாலும் இருமல் வரலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு  
நுறையீரலில் நீர் கட்டிக்கொள்ளுவதால் இருமலும் மூச்சுத்திணரலும் உண்டாகின்றன

மயக்கம்
   மயக்கம் தலைசுற்றல் போன்றவையும் நினைவிழத்தலும் சாதாரணமாக வரக்கூடும்

சோர்வு FATIGUE
   காரணமில்லாத உடர்சோர்வு உண்டாகும் இது முக்கியமான உருப்புகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதாலோ குறைவதாலோ உண்டாகின்றது.
வாந்தி பிரட்டல் (NAUSEA/ VOMITTING
)
   வாந்தி அல்லது வயிற்று பிரட்டல் வயிறு உப்பல் போன்றவை நீர் தங்குதலின் காரணமாக உண்டாகும்

மற்ற இடங்களில் வலி
   முன்பே சொன்னது போல நடு நெஞ்சிலோ இடப்புற நெஞ்சிலோ மட்டுமல்லாது வலி மார்பின் வலப்புறம் நடு வயிற்றின் மேல் பகுதி இடது தோள் இடது மேற்கை இடதுபுற
முதுகு தாடைகள் ஆகிய இடங்களிலும் வரலாம்

படபடப்பு PALPITATION
   இருதய நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு இதயம் அதிகமாகவும் வேகமாகவும் துடிப்பதனால் ஏற்படுகின்றது படபடப்
பும் மூச்சிறைப்பும் சேர்ந்து அதிகமான சுக்வீனத்தையும் தளற்சியையும் உண்டாக்குகின்றன

வியர்வை
   அளவுக்கதிகமான வியர்வையும் இதய நோயின் அறிகுறியாகும் குளிர் காலத்தில்கூட அவர்களுகு அதிகமான வியர்வை இருக்கும்.மாரடைப்பு HEART ATTACK வந்தவர்களுக்கு உடம்பு குளித்த்துபோல் வியர்த்திருக்கும்

உடல் தளர்வு WEAKNESS
   இதய நோய் உள்ளவர்களின் உடல்  நளுக்கு நாள் மெலிந்தும் தளர்ந்தும் போய்விடும். முகம் பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தைக் கொடுக்கும்

வீக்கம் SWELLING

   பாதம் கணுக்கால் கல்கள் முகம் வயிறு ஆகிய இடங்களில் வீக்கம் ஆணப்படும்.இதன் காரணமாகவே அதிகமான சோர்வு தளர்ச்சி பசியின்மை ஆகியவை உண்டாகின்றன

     நான் மேற்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இதய நோய்க்கான அறிகுற்கள் என்றாலும் வேறு பல நிலைகளிலும் நோய்களிலும் இவைகள் தோன்றலாம்
    உதாரணமாக நடு வயிற்றின் மேல் பகுதியில் குடல் புண்
(ULCER) காரணமாக வலி வரலாம்.இதய நோயின் காரணமாகவும் அங்கு வலி வரலாம்.அவ்ற்றுள் உண்மையான காரணத்தை அறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டும்
    இங்கே ஒரு முக்கியமான செய்தியை சொல்லவேண்டும்
மேல் வயிற்றிலே வலி வரும்போது இது வாய்வு வலிதான் என்று நினைப்பது தவறாகும் ஏன் எனில் வயிற்று வலியை இதயவலி என்று நினைத்து இதயத்துக்கு மருத்துவம் செய்தால் தவறில்லை.ஆனால் இருதய வலியை வயிற்று வலி என்று எண்ணி இதயத்துக்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிரையே இழக்க நேரிடலாம் எனவே
   IT IS BETTER TO ERR ON THE WRONG SIDE
தப்பை தப்பாக செய்தால் தப்பில்லை

இந்த இதய நோயின் குரிகளை மறவாமல் வைதிருங்கள்






ருத்ரத்தின் சாராம்சம்

ருத்ரம் வேதத்தின் நடுநாயகம். நான் முன்பொருமுறை சொன்னது போல ரிக் யஜுர் சாமம் என்ற மூன்று முக்கிய வேதங்களுக்குள் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்
அந்த யஜுர் வேதத்தின் நடுநாயகமாக விளங்குவது ருத்ரமாகும்.
ருத்ரத்தைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ அல்லது அதை மற்றவர் சொல்லவோ அல்லது ஓதவோ கேட்பது மிக உன்னத
மானதும் புண்ணியமானதுமாகும். எல்லோரும் ருத்ரத்தைப்
பாராயணம் செய்வது சுலபமல்ல.ஆனால் ருத்ரதில் சிறப்பாக
விளங்கும் சில பகுதிகளை நாம் அறிந்து கொள்ளுவது சிறப்
புடையதாகும்.

ருத்ரப்ரச்னவில் முழுமுதற்கடவுளான வினாயகருக்கான துதி
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் அனேகமாக பலரும்
அறிந்ததும் பலராலும் ஸ்மரிக்கப்படுவதாகும் இதோ அது
ஓம் கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவினாமுபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மஸ்பத ஆ ந
ஸ்ருண்வன்னூதிபி
சீதசாதனம் மஹாகணபதயே நம:

இந்த ஸ்லோகத்தைத்  தினம் பாராயனம் செய்து வினாயகப்பெருமானின் அருளைப்பெறுவோமாக

அடுத்து சிவ நமஸ்க்காரமாக சொல்லப்படுகின்ற ஒரு அதி
உன்னதமான பகுதி இதோ

நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயா
சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

இங்கே ஈஸ்வரன் எந்த வடிவங்களில் எல்லாம் விளங்குகிறார்
என்று சொல்லப்படுகின்றது
அடுத்து ருத்ரத்தின் ஹ்ருதயப்பகுதிய்லே பஞ்சாக்ஷ்ர மந்திரம்
சொல்லப்படுகின்றது.
எட்டாவது அனுவாஹத்திலே வரும்

   நமசிவாய

என்பதே அளவில்லா வளங்களை அளிக்கவல்ல பஞ்சாக்ஷ்ர மந்திரமாகும் இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை நாளும் பொழுதும்
ஓதுவோர்க்கு வாழ்வில் அளவில்லாத வ்ளங்களும் மகிழ்வும்
சுகமும் பல்கிப்பெருகுவது திண்ணம்

ருத்ரத்திலே சொல்லப்படுகின்ற ம்ற்றொரு உன்னதமான ஸ்லோகம் ம்ருத்யுஞ்சயஸ்லோகமாகும்.
ம்ருத்யு என்றால் எமன் .அந்த எமனை வெற்றி கொள்ளக்கூடிய ஸ்லோகமே ம்ருத்யுஞ்ஜயஸ்லோகமாகும்.
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து தினம் ஈசன் முன்னே
சொல்லி வந்தால் எம பயம் கிடையாது. எமன் அவர்களை அகாலத்தில் நெருங்கமாட்டான். அந்த உன்னதமான ஸ்லோகம் இதோ

த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

இதன் பொருள் பழுத்த வெள்ளறிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல சாவினுடய பிடியிலிருந்து உன்னருளால் விடுபடுவோமாக என்பதாகும். அனேகமாக பல இடங்களில்
ஆயுஷ் ஹோமங்களில் இந்த ஸ்லோகம் சொப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்
சிவனை வணங்குவதால் ஏற்படும் பலனைப் பற்றி சொல்வதாக
அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
ருத்ரத்தில் நமகத்தின் இறுதிப்பகுதியிலே வருகின்ற் ஸ்லோகம்

அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷஜோ அயம் சிவாபிமர்சன:

இதன் பொருள் என்னுடைய இந்த கையே இறைவனாகும்.
இந்த கையே இறைவனை விட மேம்பட்டதாகும்.
சகல பிணிக்கும் இதுவே மருந்தாகும்.
ஏன் தெரியுமா இந்தக்கையன்றோ ஈசனை வணங்குகிறது

எனவே ஈசனை வணங்குகின்ற கையே இறைவனாகவும்
இறைவனுக்கு மேலானதாகவும் எல்லாப்ப்ணிக்கும் மருந்தாகவும்
அமைகின்றது.

ருத்ரத்தை முழுமையாகப் படித்து பாராயணம் செய்ய இயலாதவர்கள் அதன் சாரமான இந்த ஸ்லோகங்களயாவது தினம் இறைவன் முன்னே சொல்லி அவன் அருள் பெற எல்லாம் வல்ல சர்வேஸ்வரண்டம் வேண்டுவோம்


ஓம் நமசிவாய