ஸ்ரீ
லலிதா
சஹஸ்ரநாமாவளி 10
செவ்வாய்,
3, செப்டம்பர், 2025
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் மூன்றாவது ஸ்லோகத்தையும் அதன்பின் அம்பாளின் பத்தாவது திவ்ய
நாமத்தையும் பார்ப்போம்.
இந்த மூன்றாவது
ஸ்லோகத்தில் மூன்று நாமாவளிகள் உள்ளன.
பத்தாவது
திவ்ய நாமம் அம்பாளின் இட்து கீழ்க் கரத்தில் உள்ள கரும்பு வில் என்ற ஆயுதத்தைப் பற்றிவிளக்குகின்றது
3) மனோரூபேக்ஷுகோதண்டா, பஞ்சதன்மாத்ர ஸாயகா |
னிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாண்ட மண்டலா || 3 ||
மனோரூப |
மனதின் வடிவமாக |
இக்ஷு |
கரும்பு |
கோதண்ட |
வில் |
பஞ்ச |
பஞ்ச பூதங்களான நீர்,நிலம்
தீ வாயு ஆகாயம் |
தன்மாத்ர |
சுவை,ஊறு,ஒளி,ஓசை,
நாற்றம் என்பனவற்றை |
சாயக |
அம்புகளாகக் கொண்டவள் |
னிஜா அருண |
நிரந்தரமான சிவந்த |
ப்ரபா |
ஒளிர்ந்து ப்ரஹாசித்து |
பூர |
முழுவதுமாக |
மஜ்ஜத் |
மூழ்கச் செய்தல் |
ப்ரம்மாண்ட |
பெரிய அண்ட சராஸாரம் |
மண்டலா |
மண்டலம் |
சங்கல்பம்,விகல்பம்
எங்கிற மனமாகிய கரும்பு வில்லை உடையவள்,ஐந்து உணர்வுகளான
கேட்டல்,உணர்தல்,கானல்,ருசித்தல்,முகர்தல் என்றவைகளை அம்புகளாக உடையவள்,தன்னுடைய
சிவந்த ப்ரகாசத்தில் ப்ரம்மாண்ட மண்டலங்களை மூழ்கச் செய்பவள்
இப்பொழுது
நாம் பத்தாவது நாமாவளியின் விளக்கத்தைப் பார்ப்போம்
10.
மநோரூபேக்ஷு கோதண்டா
மநோ ரூப === மனதின் வடிவமாக
இக்ஷு === கரும்பினாலான
கோதண்டா === வில்லினைக் கொண்டிருப்பவள்
மனமும் கரும்பினுக்கு ஒப்பிடப் படிகிறது.கரும்பு வளர வளர அதன் சுவை கூடிக்கொண்டே போகும். அதிலும் முதிர்ந்த அடிக்கரும்பு மிகவும் சுவையுள்ளதாய் இருக்கும். அதுபோல் பக்குவப்பட்ட மனமே சிறந்தது.
மனம் என்பது சங்கல்பம் மற்றும் விகல்பம் இரண்டையும் உள்ளடக்கியது
சங்கல்பம் என்பது தீர்மானம், சிந்தனை செயல்முறை.
விகல்பம் என்பது புலன்களின் வேறுபாடு.
இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை.
மனமும் அறிவைப் போலவே நுட்பமானது. மனம் ஐந்து புலன் உறுப்புகள் மூலம் பிரதிபலிக்கிறது. இது சங்கல்பம் மற்றும் விகல்ப குணம் இரண்டையும் கொண்டுள்ளது, ஏனெனில் இது புலன் உறுப்புகளிலிருந்து பெறப்பட்ட பதிவுகள் மூலம் சிந்தனையின் வடிவத்தில் நன்றாகச் சீரமைக்கப்பட்டு இறுதியில் செயல்களின் வடிவத்தில் வெடிக்கிறது.
இக்ஷு என்றால்
கரும்பு, கோதண்டம்
என்றால் வில். அவள் தனது இடது
கீழ் கையில் கரும்பு வில்லைப் பிடித்திருக்கிறாள். கரும்பு வில்
ஏன்? கரும்பு நசுக்கப்பட்டால், இனிப்பு மற்றும்
சுவையான சாறு பெறப்படுகிறது, அதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. ஒருவர் தனது
மனதை நசுக்கினால் (டுப்படுத்தினால் மனதைக் கட்), அவர்
பிரம்மத்தின் இனிமையான யதார்த்தத்தைப் பெறுகிறார். இந்தக் கரம்
ஷ்யாமலா தேவி என்றும் அழைக்கப்படும் மந்திரிணியால்
குறிக்கப்படுகிறது.
இத்துடன் இன்றைய
பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை பதினோறாவது நாமாவளியின் விளக்கமோடு
சந்திப்போம்
இந்தப் பதிவினை குரல் விளக்கமாகவும்
தந்துள்லேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்.நாளை பத்தாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
நன்றி. வணக்கம்.
செவ்வாய், 3, செப்டம்பர்,
2025
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment