Friday, June 10, 2016

சிவா குடும்ப அந்தாதி
ஸ்ரீ சிவகுடும்பம்
திருவிளையாடல்கள் பலகாட்டி திருவருளும் தில்லைநடராஜன்
பெருவழகுடன் பவம்காக்கபரமனுடன்பரிவோடாடும்பரமேஸ்வரி                                      மருவிலா மனதோடு எண்ணுவோர் செயல்காக்கும் மஹாகணபதி  உருவடிவழகுடைபாலன்உருகுவோர்வினைதீர்க்கும்வடிவேலன்                                                    கருத்தினில் கருணைமிகு சிவகுடும்பத்தினை உருவேற்றுவோமே

சிவ குடும்ப அந்தாதி

எண்ணத்தில்  உன்னை முன்வைத்தே நல்வேழமுகப்                       பண்ணமுதனே செய்யும் செயல் யாவும்துவக்குவேன்                        கண்மூன்றுடை கருணாகரன் பெற்ற செல்வனே என்றும்                 மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே

அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை             திரளுமே தூய பக்தர்கூட்டம் தினம் தினம் உன் திருவடிகாண               அரளுமே தீதுற்றோர் தீயக்கூட்டம் உன் திருநாமப்புகழ் கேட்டு                  வரளுமே வற்றாத வறுமையும் தீமையும் செந்திலானைக்கண்டு

கண்டேன் தாயே நின் சலங்கைதிகழ் கமலப்பொற்பாதம்                     கொண்டேன் அளவிலாப் பெருமகிழ்வு என்அம்மா உந்தன்                     கெண்டையம் தடங்கண் மலர் பேரெழில் கண்டு வியந்து             வண்டார் குழலியே ஈசன் என்றும் மகிழ் உமையம்மையே

அம்மை இடப்புறம் எழிலுறக்கொண்ட ஆலவாயா அன்புடன்                எம்மை எந்நாளும் ஏற்றமுறச் செய்யும் எங்கள் ஏகம்பனே            தம்மையே தந்தார்க்கு தாயுமானவனே சிறிதும் தவறாது              இம்மையும் எம்மையும் நிறைவோனே ஜெகன்நாதன் எண்ணம்

எண்ணத்தில் என்றும் ஏகமாய் நிறைந்திட்ட ஏகநாதனே   ண்ணமுதப்பேரெழிலாள் பரமேஸ்வரியுடனும் பார்புகழ்     முன்னவன்முதல்வன்விநாயகனுடன்மறவாதருளும்நம்             சின்னப்பிள்ளை செவ்வேளோடும் நிறைவாயே என் எண்ணம்

ஜகன்நாதன்

No comments:

Post a Comment