Monday, December 3, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  7
நமோ அஸ்து நீலக்ரீவாய சஹஸ்ராக்ஷாய மீடுஷே
அதோ யே அஸ்ய சத்வானோஃஹம் தேப்யோஃகரந் நம:
  நீலக் கண்ட்த்தை உடையவரும் ஆயிரம் கண்களைக்கொண்டவரும் வேண்டுவோர்க்கு வேண்டுவதை அளிப்பவருமான பரமேஸ்வரை வணங்குகிறேன்
மேலும் அவரது பிரதம கணங்களான அடியவர்களையும் வணங்குகிறேன்.
ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ ராத்னியோர் ஜ்யாம்
யாச்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப
  பகவானே உங்களுடைய வில்லின் இரண்டு நுணிகளிலும் பூட்டியுள்ள நாண்களை அவிழ்த்து விடுங்கள் உங்களுடைய கையில் உள்ள  பாணங்களை அம்பாராத்துணியில் வைத்து விடுங்கள்      
அவத்த்ய தனுஷ்வ சஹஸ்ராக்ஷ சதேஷூதே
நீசிர்ய சல்யானாம் முகா சிவோ ந: சுமனா பவ
  கணக்கற்ற கண்களை உடையவரே பல அம்பராத்துணிகளை உடையவரே நீங்கள் தங்கள் வில்லின் நாணைத்தளர்த்திவிட்டு அம்புகளின் முனையை கூர் மழுங்கச்செய்து எங்களுக்கு மங்கள வடிவினராகவும் நல் மனதுடையவராகவும் ஆகவேண்டும்               [1   11]

No comments:

Post a Comment