Sunday, August 24, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி--4

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனியகாலை வணக்கம்.இன்று  நாம் ல்லிதா சஹஸ்ர நாமத்தின் முதல் நாமத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்.

சிவதாஸன் ஜகன்நாதன்

24-8 -2025

நாமம்—1

1.ஸ்ரீ மாதா

இந்த சஹஸ்ரநாமம் லலிதாம்பிகையை அனைத்திற்கும் தாய் என்று அழைப்பதன் மூலம் தொடங்குகிறது, இது பிரபஞ்சம் மற்றும் அதன் அனைத்து உயிரினங்களின் மீதும் அவளுடைய கருணையை வலியுறுத்துகிறது. அவள் ஸ்ரீ மாதா என்று அழைக்கப்படுவதால், இந்த நாமம் பிரம்மனின் முதல் செயலான படைப்பைக் குறிக்கிறது.

நாம் நமது தாயை மாதா என்று அழைக்கிறோம். மாதா என்றால் தாய் என்று பொருள். ஸ்ரீ என்ற முன்னழைப்பு இங்கே முக்கியமானது. ஸ்ரீ (श्री) தாய்மையின் மிக உயர்ந்த வடிவத்தைக் குறிக்கிறது. மனிதத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் கவனித்துக் கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அனுபவிக்க வேண்டிய தங்கள் அன்புக்குரியவர்களின் துயரங்களையும் துன்பங்களையும் அவர்களால் நீக்க முடியாது.

லலிதாம்பிகை ஒரு மனிதத் தாயை விட மிக உயர்ந்தவள் என்பதால், அவள் தன் குழந்தைகளின் துக்கங்களையும் துயரங்களையும் நீக்கும் திறன் கொண்டவள். குழந்தைகள் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது, ஏனெனில் அவள் விண்மீன் மண்டலத்தை உள்ளடக்கிய முழு பிரபஞ்சத்தின் தாயாக இருக்கிறாள். அவள் மாதா என்று அழைக்கப்படுகிறாள், ஏனெனில் அவள் படைப்பாளி, பராமரிப்பவள் மற்றும் கரைப்பவள். பிரபஞ்சம் அவளிடமிருந்து உருவாக்கப்பட்டது. பிரபஞ்சம் அவளுடைய அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறது. கலைப்பு நடைபெறும்போது, ​​பிரபஞ்சம் அவளுடன் மீண்டும் இணைகிறது. சம்சார சுழற்சி (அற்புதமான இருப்பு மற்றும் மறுபிறவியைக் குறிக்கும் உலகம்) பிறப்பு, வாழ்வாதாரம் மற்றும் இறப்பு மூலம் மீண்டும் நிகழ்கிறது. சம்சாரம் ஒரு கடல் என்று அழைக்கப்படுகிறது. சம்சார நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவது கடினம். சம்சார நீரோட்டம் புலன்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த புலன் உறுப்புகள் ஆசைகள் மற்றும் பற்றுதல்களை ஏற்படுத்தும் மனதை பாதிக்கின்றன. சம்சாரத்தின் தடைகளைத் தாண்டி இலக்கை (பிரம்மத்தை உணர்தல்) அடைய ஸ்ரீ மாதா மட்டுமே நமக்கு உதவ முடியும். இது அவளை வழிபடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

ஸ்ரீ மாதா என்பது தெய்வங்களின் தாய் ஸ்ரீ லட்சுமி (செல்வத்தின் தெய்வம்), சரஸ்வதி (அறிவின் தெய்வம்) மற்றும் ஸ்ரீ துர்கையின் வடிவங்களாகவும் கொள்ளவேண்டும்

நாளை இரண்டாவது நாமாவளியுடன் சந்திப்போம்

ஓம் நம்சிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, 24, ஆகஸ்ட், 2025

 

 


Saturday, August 23, 2025

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்—3

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வனக்கம்,

இன்று நமது ல்லிதா சஹஸ்ர நாம மூன்றாவது பதிவில் முதலாவது ஸ்லோகத்தையும், அதன் விளக்கத்தையும் பார்ப்போம்

ல்லிதா சஹஸ்ர நாமத்தின் முதல் ஸ்லோகத்தில் 5 நாமங்கள் வருகின்றன.இன்று முதல் ஸ்லோகத்தின் விளக்கம் பார்ப்போம்

1) ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராஜ்ஞீ, ஸ்ரீமத்-ஸிம்ஹாஸனேஸ்வரீ |
சிதக்னி குண்டஸம்பூதா, தேவகார்ய ஸமுத்யதா || 1 ||

ஸ்ரீ மாதா

உலகின் அனைத்திற்கும் தாயானவள்

ஸ்ரீ மஹா

பெருமைக்குரிய அளப்பிடதர்க்கரிய

ராஜ்ஞீ

ப்ரபஞ்சத்தை  ஆளும் பேரரசி

ஸ்ரீமத்

பெருமைக்குரிய

ஸிம்ஹ

சிம்மம்

ஆஸன

பீடம் இருக்கை

ஈஸ்வரி

இறைவி

சித்

சித் என்ற அறிவு,ஆன்மா

அக்னிகுண்ட

அக்நியிலான ஹோம குண்டம்

ஸம்பூதா

தோண்றியவள்

தேவகார்ய

தேவர்களின் செயல்களுக்காக

சமுத்யதா

ஈடுபடுதல் வழங்குதல்

 

சர்வோத்தமான ஜகன் மாதா, சகல ப்ரபஞ்சங்களையும் பரிபாலம் செய்பவள்,சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள்,சித்என்றஅறிவாகிய ஹோம குண்த்திலிருந்து உதித்தவள்,தேவர்களின் காரியங்களை செய்வதில் ஊக்கமுடையவள்.தர்மத்தின் அடிப்படையில் அமைந்த நேர்மைக்கும் நீதிக்கும் உட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்

இந்த முதல் ஸ்லோகம் அம்பாளின் உதயம் என்னும் முதல் பகுதியில் ஆரம்பிக்கின்றது.இந்த முதல் ஸ்லோகத்தில் ஐந்து நாமங்கள் உள்ளன.

நாளை முதல் தினம் ஒரு நாமமாக இந்த ஐந்து நாமங்களின் விளக்கங்களையும் பார்ப்போம்.

இந்தப் பதிவினை எனது VOICE ஆகவும் தந்துள்ளேன் .கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேர்ருட் கருட்கருனைக்கு பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

2025-08-23




Thursday, August 21, 2025

 

ஸ்ரீ ல லிதா சஹஸ்ர நாமம் 3

த்யாந ஸ்லோகங்கள்

அன்னையின் அழகையும் வடிவத்தையும் பெருமையை உணர்த்தும் நான்கு த்யான ஸ்லோகங்களையும் பார்ப்போம்

1)ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயநாம்மாணிக்யமௌலிஸ்புரத்தாராநாயகஶேகராம் ஸ்மிதமுகீமாபீநவக்ஷோருஹாம் பாணிப்யாமலிபூர்ணரத்நசஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்ஸௌம்யாம் ரத்நகடஸ்தரக்தசரணாம் த்யாயேத்பராமம்பிகாம்

 

சிந்தூருரண விக்ரஹாம்

குங்குமத்தின் நிறத்தி ஒத்த உதிக்கும் சூரியன் போன்ற உருவம்

திரி நயனாம்

முக்கண்ணுடையவள்

மாணிக்க

மாணிக்கத்தை

மௌலி ஸ்புரத்

சிரசில் தரித்தவள்

தாராநாயக சேகராம்

நட்சத்திரங்களின் நாயகனான சந்திரனை உச்சியில் தரித்தவள்

ஸ்மித முகீ

புன்னகை சிந்தும் முகம்

ஆபீன வக்ஷோருஹாம்

திண்மையான் மார்பகமுடையவள்

பாணிப்யாம்

கரங்களில்

அளிபூர்ன

தேன் நிரம்பிய

ரத்ன ஷசகம்

ரத்ன கிண்ணத்தை ஏந்தியிருப்பவள்

ரக்தோத் பலம் பிப்ரதீம்

சிவந்த மலர்களை ஏந்தியுள்ளாள்

சௌம்யாம்

அழகு பொருந்தியவள்

ரத்ன கடஸ்த

ரத்னக் குடத்தில்

ரத்ன சரணாம்

சிவந்த பாதங்கலை இருத்தியுள்ளாள்

த்யாயேத்

வணங்குகிறேன்

பரமாம் அம்பிகாம்

இப்படிப் பட்ட அம்பிகையை

குங்குமத்தின் நிறத்தை ஒத்த திருமேனியும் முக்கண்ணும் ,சிவந்த மாணிக்கத்தை சிரசிலும்,சந்திரனை உச்சியிலும் தரித்தவளும், மந்தஹாசப் புன்னகை சிந்துபவளும்,திண்மையான மார்பகத்தை உடையவளும்,கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்னத்தையும்,சிவந்த மலர்களையும் கொண்டவளும் சிவந்த  பாதத்தை ரத்னக் குடத்தில் இருத்தி வீற்றிருப்பவலும் சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை த்யானிக்கிறேன்


 

2)அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருதபாஶாங்குஶபுஷ்பபாணசாபாம்

அணிமாதிபிராவ்ருதாம்மயூகை                                                               ரஹமித்யேவ விபாவயே பவாநீம்

 

அருணாம்

சூரிய அருணோதயம்

கருணா

கருணை கொண்டவள்

தரங்கீ

அலைகள்

அக்ஷீ

கண்கள்

த்ருத

சுமந்து ,தரித்துக் கொண்டிருப்பவள்

பாஸ

பாஸம் எனும் சூக்ஷுமப் பிடிப்பு

அங்குஸம்

ஜீவங்களை வசப்படுத்தி தன்னுள் வைத்திருத்தல்

புஷ்ப பாணா

மலர் அம்புகள்

சாபாம்

கரும்பு வில்

அணிமாதி

அஷ்ட தேவதைகளால்

ப்ராவ்ருதாம்

சூழப் பட்டவள்

மயூஹை

ஒளிர்கின்ற

அஹம்

நான்

இத்யேவ

இப்படிப்பட்ட

விபாவயே

மஹத்துவம் உடைய

பவானீம்

பவானி தேவி

சூரியோருணோதயத்தின் நிறத்தைக் கொண்டவளும்,அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும்,பாசம் அங்குசம் தரித்தவளும்,மலர் அம்புகளையும் கரும்பு வில்லையும் கொண்டு அஷ்டமா சித்திகளால் சூழப்பட்டவளுமான் பவானியை த்யானிக்கின்றேன்


 

3)த்யாயேத் பத்மாஸநஸ்தாம்விகஸிதவதநாம் பத்மபத்ராயதாக்ஷீம்

ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேமபத்மாம் வராங்கீம்

ஸர்வாலங்காரயுக்தாம்ஸததமபயதாம் பக்தநம்ராம் பவாநீம்

ஶ்ரீவித்யாம் ஶாந்தமூர்திம்ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம்

 

த்யாயேத்

ப்ரார்த்தித்து வணங்குகிறேன்

பத்மாஸனஸ்தாம்

தாமரையில் வீற்றிருப்பவள்

விகசித

ஒளிரும்

வதனாம்

வதனம் உடையவள்

பத்ம பத்ராய

தாமரை இதழ்களை ஒத்த

அக்ஷீ

கண்கலை உடையவள்

ஹேமாபாம்

பொன்னென மிளிர்ந்து ஜ்வலிப்பவள்

பீத வஸ்த்ராம்

ப்ரஹாசிக்கும் ஆடைகளை தரித்தவள்

கரகலித

கரங்களில்

லசத்

மின்னும்

ஹேம பத்மாம்

தங்கத் தாமரை

வராங்கீம்

வரங்களின் வடிவமானவள்

சர்வ

சகல விதமான

அலங்காரயுக்தாம்

ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள்

சததம்

எப்பொழுதும்

அபயதாம்

அபயபம் அளிப்பவள்

பக்த நம்ராம்

பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள்

ஸ்ரீவித்யாம்

வித்தையின் இருப்பிடம்,ஞான ஸ்வரூபி

ஷாந்த மூர்த்திம்

அமைதியின் இருப்பிடம்

சுர

தேவர்களால்,தெய்வங்களால்

அனுதாம்

வணங்கப் படுபவள்

சம்பத்

செழிப்பும் வளமும்

பிப்ரதாத்ரீம்

தந்தருள்பவள்

த்யாயேத்

த்யானித்து வணங்குகிறேன்

பவானீம்

பவானி அம்பாளை

 

பொருள்

பத்மத்தில் வீற்றிருப்பவளும்,ஒளிரும் திங்களென முகமுடையவளும்,தாமரை இதழை ஒத்த கண்களை உடையவளும்,ப்ரகாசிக்கும் பட்டாடை தரித்தவளும்,கைகளில் மிளிரும் தங்கத்தாமரையைய் கொண்டவளும்,சகல விதமான ஆடை ஆபரண அலங்காரங்களுடன் பூரித்திருப்பவளான் பவனியை வணங்குகிறேன்


 

ஸகுங்குமவிலேபநாம் மலிகசும்பிகஸ்தூரிகாம்ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸஶரசாபபாஶாங்குஶாம் அஶேஷஜநமோஹிநீம் அருணமால்யபூஷாம்பராம்ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம்

 

ஸகுங்கும

அழகான குங்குமத்தை

விலேபனாம்

பூசி அணிந்திருப்பவள்

அளிகசும்பி

நெற்றியில் முத்தமிட்டிருக்கும்

கஸ்தூரிகாம்

கஸ்தூரித் திலகம்

ஸமந்த் ஹசி

மெல்லிய புன்னகை

தேக்ஷணாம்

கொண்டிருப்பவள்

சரசாப

அம்பு வில்

பாஸாம்

ஜீவன்களைக் கட்டும் பிணைப்ப

அங்குசம்

அங்குசமான அடையாளம்

அஸேஷ

எல்லாமும் எல்லோரும்

ஜனமோஹினீம்

ஜனங்ளால் மோஹிக்கப் படுபவள்

அருண மால்ய

சிவந்த செந்தூர மாலை

பூஷாம்பராம்

அலங்காரமாக உடுத்தியிருப்பவள்

ஜபாகுஸும

செம்பருத்தி மாலை

பாஸுராம்

மின்னும்

ஜப விதௌ

ஜபத்தின் போது அதன்விதிகளின் படி

ஸ்மரேத்

த்யானித்து வணங்குகிறேன்

பொருள்

குங்குமத்தி பூசியிருப்பவளும்,நெற்றியில் கஸ்தூரித் திலகம் கொஞ்சுபவளும்,மென்மையான புன்னகை சிந்துபவளும்,அம்பு வில் பாசாஅங்குசம் ஏந்தியவளும்,எல்லா ஜீவங்களும் தன்னித்தில் அன்பு கொள்லச் செய்திருப் பவளும்,சிகப்பு மாலை செம்பருத்தி பூ சூடியிருப்பவளும் அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜ்வலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது த்யானிக்கிறேன்


 

இன்று இந்த முன்னுறை மற்றும் த்யான ஸ்லோகங்களுடன் நிறைவு செய்கிறேன்

நாளை முதல் ஒவ்வொரு ஸ்லோகமாக பொருளுடன் விளக்குகிறேன்

ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்