Saturday, July 8, 2023

 



  

 

 


ஸுப்ரமண்ய புஜங்கம்

 

முதல் ஸ்லோகம்

 

சித்தி விநாயக மூர்த்தி கீ ஜய்

 

வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரோ

 

ஓம் நமசிவாய

இன்று ஸ்ரீ சுப்ரமன்ய புஜங்கத்தின்                                                                  முதல் ஸ்லோகம் பற்றி தந்துள்ளேன்

 

நம்  ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி கிரந்தங்கள் இயற்றிக் கொடுத்து இருக்கார். அதுல ஸுப்ரமண்ய புஜங்கம் ன்னு ஒரு ஸ்தோத்ரம். முருகனுடைய பெருமைகளை ரொம்ப அழகா சொல்றது. ஒரு வாட்டி ஆசார்யாளுக்கு யாரோ ஆபிசாரம் பண்ணினதாகவும், உடம்புல ரொம்ப ஸ்ரமங்கள் வந்ததுனால, கோகர்ணத்துல இருக்கிற ஸ்வாமி கனவுல நீ போய் ஸ்ரீ ஜெயந்திபுரம் என்கின்ற திருச்செந்தூர் முருக பெருமானை வேண்டிக்கோ, அவருடைய சன்னிதியில கொடுக்கிற விபூதியை  இட்டுண்டா, எல்லா உபாதைகளும் போய் விடும். பிசாசுகள் எல்லாம் கூட ஓடிப் போய் விடும்ன்னு ஸ்வாமியே சொன்னதாகவும் கதை.

ஆச்சார்யாள் யோக மார்கமாக திருச்செந்தூர் வந்து முருகப் பெருமானை தரிசிக்கிறார். அவர் காத்தால வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணும் போது, ஆதிசேஷன் ஸுப்ரமண்யருக்கு பூஜை பண்ணிண்டு இருந்தார், அதனால புஜங்க வ்ருத்தம் ஞாபகம் வந்தது. அதைத் தவிர திருச்செந்தூர் கடற்கரையில இருக்கறதுனால, அலைகளுக்கும் புஜங்கம்ன்னு பேரு, அப்படி புஜங்க வ்ருத்தத்துல அவரோட வாக்குல இருந்து ஒரு அழகான ஒரு ஸ்தோத்ரம் வந்தது என்று சொல்வார்கள்.

இந்த  ஸுப்ரமண்ய புஜங்கந்தை மஹா மந்த்ரமாக மஹான்கள் நினைச்சு இருக்கா.

. அதுல முதல் ஸ்லோகம்

 

सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री  महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या ।

विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ||

 

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி |

 

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். நான் இதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேன். ‘ஸதானா எப்பொழுதும், ‘பாலரூபாபிகுழந்தை வடிவராக இருந்தாலும், இந்த முதல் ஸ்லோகம் பிள்ளையார் மேல. பிள்ளையார் எப்பவுமே குழந்தை வடிவம். வடிவம் மட்டும் இல்லை, அவருடைய மனசும் குழந்தை மாதிரி, நெட்டில கூட பிள்ளையார் பண்ணுவா, அவ்வளவு light hearted ஆக இருக்குற ஸ்வாமி. அவருக்கு பந்தா கிடையாது, விசேஷமா கோவில் கட்டணும் வேண்டியது இல்லை, ஒரு அரசமரத்து அடியில உடகார்ந்து இருப்பார். ஒரு அபிஷேகம் பண்ணி, இடுப்புல ஒரு துண்டை சுத்தி, ஒரு தேங்காயை நைவேத்தியம் பண்ணினாலே, அபாரமான வரங்கள் கொடுப்பார். அப்படீன்னு அவருடைய எளிமைய பத்தி மஹாபெரியவா ரொம்ப பேசியிருகா. அப்பேற்பட்ட குழந்தை ஸ்வாமி அவர், அவர் இப்பவுமே குழந்தை ஒரே stage-தான் அவருக்கு. வளர்ந்து பெரியவர் ஆனார்-ங்கிறது  கிடையாது, ‘ஸதா ஸதா பாலரூபாபி

குழந்தைனா ஒரு அளவுக்குத் தான் strength வலிமை இருக்கும் ன்னு நினைப்போம். ஆனா இவர் என்ன பண்றார்ன்னா விக்னாத்ரிஹந்த்ரீவிக்னம் என்ற மலைகளையே ஹந்த்ரீ’-ன பொடி பொடி ஆக்குபவர். மலையையே பொடி பொடியாக்க கூடிய அளவுக்கு power இருக்கு. குழந்தையாக இருக்கார், ஆனா நமக்கு வர மலை போன்ற விக்னங்களை எல்லாம் பொடி பொடி ஆக்கிடறார். ஆதி ஆச்சார்யாள், தான் ஸுப்ரமண்யரை ஸ்தோத்ரம் பண்ண போறோம் என்று ஆரம்பிக்கும்போது, அந்த ஸ்தோத்ரம் நல்ல படியாக முடியணும்ங்கிறதுக்கு, பிள்ளையாரை வேண்டுகிறார். எந்த பூஜை பண்ணினாலும், முதல்ல பிள்ளையார் பூஜை பண்ணிட்டு அப்பறம் தான் ஒரு வெங்கடேச சமாராதனை, ஒரு நவராத்திரி  பூஜை அப்படீன்னு பண்ணுவா இல்லையா, அப்படி தெய்வங்களை வேண்டிக்கிறதுக்கே, முதல்ல பிள்ளையார வேண்டிக்கறது என்ற அந்த ஒரு ஸம்ப்ரதாயத்தையும் கொண்டு, முதல் ஸ்லோகத்துல, இந்த ஸுப்ரமண்யரை நான் ஸ்தோத்ரம் பண்ண விரும்புகிறேன், அது நல்லபடிய  முடியறத்துக்கு ஒரு காப்பு செய்யுள் போல இந்த ஸ்லோகம் இருக்கு.

மஹாதந்தி வக்த்ராபிபெரிய ஒரு தந்தம் இருக்கு, அப்படீன்னா என்ன அர்த்தம் யானை முகம்னு அர்த்தம். ‘மஹாதந்தி வக்த்ராபி’  யானையனுடைய வக்த்ரம், முகத்தவராக இருந்தாலும் பஞ்சாஸ்யமான்யாபஞ்ச பாத்ரம்னு  சொல்றோம் இல்லையா, ‘பஞ்சனா அகன்ற ன்னு அர்த்தம். ஆஸ்யம் னா வாய்பஞ்சபாத்ரம்-னா பெரிய வாய் இருக்கிற பாத்திரம். ‘பஞ்சாஸ்யமான்யாஇந்த இடத்துல பஞ்சாஸ்யம் னா சிங்கம்னு ஒரு அர்த்தம். சிங்கத்தை கனவுல கண்டாக் கூட யானை பயந்து போய் பிளிறிண்டே  இருக்கும் ன்னு சொல்லுவா. அப்படி சிம்ம சொப்பனம் அப்படீம்பா. ஆனா இவர் யானையாக இருந்தாலும், சிங்கங்கள் எல்லாம் இவரை மதிக்கறது, ன்னு அழகா சொல்றார். இந்த இடத்துல இவர் கணபதியா இருந்தாலும் பஞ்சாஸ்யம்-ங்கிறதுக்கு இன்னொரு அர்த்தம் ஆஸ்யம்-ன முகம், பஞ்சாஸ்யம்-ங்கிறதுக்கு இன்னொரு meaning ஐந்து முகங்களை படைத்தவர்-ன்னு அர்த்தம். ஐந்து முகங்களை படைத்தவர் யாரு, சிவபெருமான், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசான்யம், அப்படீன்னு ஐந்து முகங்களை படைத்த, சிவபெருமானும் வணங்கும், மதிக்கும் கணபதி அப்படீன்னு இந்த பாதத்துக்கு அர்த்தம்.

சிவபெருமான் த்ரிபுர ஸம்ஹாரம் பண்ண போறார், அப்போ இவர் போடற அஸ்த்ரங்கள் எல்லாம், அந்த அசுரர்களை ஒண்ணுமே பண்ணலயாம். ஏன்னா அவா ஒரு விக்ன யந்த்ரம் ஸ்தாபிச்சு, இந்த அஸ்த்ரங்களை  எல்லாம் பலிக்காம பண்ணிண்டே இருக்கா. அப்போ சிவபெருமான் பிரணவ ஸ்வரூபமா கணபதியை த்யானம் பண்ணி, பூஜை பண்ணின உடனே, பிள்ளையார் வந்து அந்த விக்ன யந்த்ரத்தை உடைச்சு போட்டுடறார், அதுக்கப்புறம் சிவபெருமான் த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணார். அப்படி அப்பாவினாலேயே மான்ய னா மதிக்கப்பட்டபூஜை செய்யப்பட்ட பிள்ளை இவர். அதனாலதான் அவருக்கு அர் விகுதி கொடுத்து, பிள்ளையார் னு மரியாதையா கூப்பிடுறோம். அப்படி யானை சிங்கத்துக்கு பயப்படும், ஆனா இந்த கணபதியை பஞ்சாஸ்ய  பஞ்ச முகம் கொண்ட  சிவபெருமானே வழிபடுகிறார். ‘விதீந்த்ராதிம்ருக்யாவிதி-ன்னா ப்ரம்ம, இந்திரன் னா இந்த்ரன் விதீந்த்ராதிம்ருக்யாஇந்திரன், ப்ரம்மா எல்லாரும், தேடி வந்து இந்த பிள்ளையாரை நமஸ்காரம் பண்ரா. ‘கணேசாபிதாகணேசன் என்ற பேர் கொண்டவர், ‘விதத்தாம் ச்ரியம்எனக்கு செல்வங்களை, மங்களங்களை அருளட்டும்.

காபிஏதோ ஒண்ணு-ன்னு ஸம்ஸ்க்ருதத்துல அர்த்தம், இந்த எடத்துல அளவற்ற மஹிமையோடு கூடிய ன்னு அர்த்தம். ‘கல்யாண மூர்த்திபரம மங்களகரமான வடிவினரான, எப்போ நினைச்சாலும் சந்தோஷத்தை கொடுக்ககூடிய ஒரு ரூபம் கணபதியுனுடைய ரூபம். அந்த பிள்ளையாரை நித்ய கல்யாண மூர்த்தியான கணேசரை எங்களுக்கு, எனக்கு மங்களங்கள் கிடைக்கும் பொருட்டு வேண்டுகிறேன்.

கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம்அவர் எங்களுக்கு மங்களங்களை கொடுக்கட்டும், ஐஸ்வர்யங்களை கொடுக்கட்டும் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இந்த நல்ல கார்யங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் போது ஷ்ரேயாம்ஸி பஹு விக்னானிஅப்படீன்னு ஷ்ரேயஸான ஒரு கார்யம் நடக்கணும்னா அதுக்கு, நிறைய  விக்னங்கள் வரும். அப்போ, நம்ம பிள்ளையாரை வேண்டிண்டு ஆரம்பிக்கணும்ங்கிற அளவில், இந்த ஸுப்ரமண்ய புஜங்கதுக்கு அர்த்தம் சொல்லுறதுங்கிறது எனக்கும் உங்களுக்கும் ரொம்ப ஒரு ஸ்ரேயஸை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம், இது நல்ல படியாக முடியணும்ன்னு வேண்டிண்டு இந்த முதல் ஸ்லோகத்தை இன்னோரு வாட்டி சொல்லி இதை இன்னைக்கு பூர்த்தி பண்ணிகிறேன்.

 

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி  

 

 

நம: பார்வதி பதயேஹர ஹர மஹாதேவ.

 

No comments:

Post a Comment