Wednesday, July 12, 2023

 


 

 

ஸுப்ரமண்ய புஜங்கம்

சிவதாஸன் ஜகன்நாதன் 

இரண்டாவது ஸ்லோகம் – 

அறுமுக குமர சரணம் என அருள்பாடி


ஸுப்ரமண்ய புஜங்கம் இரண்டாவது ஸ்லோகம் 

நேற்றைக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருந்து                                                           முதல் ஸ்லோகம். முன்னர் பார்த்தோம்

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ                                                                       மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |                                            விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே                                                                        விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திம்

அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்து,                                                                                          அதோட அர்த்தத்தை பார்த்தோம்.                                                                                             இன்னைக்கு, ரெண்டாவது ஸ்லோகம்.   

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்                                                                             ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்                                      |                                  சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே                                  முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||

ஆசார்யாளுக்கு தன்னுடைய முகத்துலேர்ந்து வெளிப்பட்ட முதல் ஸ்லோகத்தை கேட்டு, “ஆஹா நான் எவ்வளவு ஸாஹஸத்தோட, தைரியத்தோடு உங்களை ஸ்தோத்ரம் பண்றேன் ன்னு வந்து நிக்கறேனே, எனக்கு ஒண்ணுமே தெரியாதே!

இப்படி ஒரு ஸ்லோகம் என் வாக்கில் வந்துதேன்னு ஆச்சர்யப் பட்டு சொல்றார்,  “நான் உங்களை ஸ்தோத்ரம் பண்ண போறேன், ஆனா இது நான் பண்றது கிடையாது. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கின்னு சொல்றா மாதிரி, உங்களுடைய அருளால் எனக்கு இந்த வாக்கு வர்றது. நான் இதைக் கொண்டு உங்களை ஸ்தோத்ரிக்கிறேன்”  ன்னு சொல்றார். அதை இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

ந ஜானாமி சப்தம்எனக்கு ஒரு பதத்தைக் கூட சரியான பொருள் தெரிஞ்சு பேச தெரியாது.

ந ஜானாமி சார்த்தம்இது இன்ன அர்த்தம்-ன்னு தெரியாது. எனக்கு vocabulary-யும் இல்லை, semantics ம் தெரியாது. வார்த்தைகளுக்கு சரியான அர்த்தங்களும் சொல்ல தெரியாது.

ந ஜானாமி பத்யம்எனக்கு ஒரு கவிதை எழுதறதுக்கும் தெரியாது. யாப்பிலக்கணம் னா என்ன, என்ன rules, எவ்வளோ அக்ஷரங்கள் இருக்கணும், எவ்வளோ பாதத்துல இருக்கணும், ஹ்ரஸ்வம் னா குறில், தீர்க்கம் னா நெடில், இதெல்லாம் எப்படி அமையணும், தளை தட்டாம இருக்கணும். அப்படியெல்லாம் rules,  இருக்கு, அந்த rules எல்லாமும் எனக்கு தெரியாது.”

சரி, கவிதை எழுத தெரியாது, ஏதோ prose மாதிரி, ‘கத்யம்னா prose, ஸம்ஸ்ருதத்துல சூர்ணிகைன்னு சொல்றா. தண்டாகாரமா, line-ஆ சொல்லிண்டே போறது. ஷ்யாமளா தண்டகம் மாதிரி, அப்படி ஏதாவது சொல்ல தெரியுமான்னா, அது கூட எனக்கு சொல்லத் தெரியாது.

 எழுத்தே தெரியாதுங்கிற போது  வார்த்தைகளே தெரியாதுங்கிற போது நான் எப்படி உங்களை ஸ்தோத்திரிக்க முடியும்?” ன்னு சொல்லிட்டு,

ஆனால் என்னுடைய மனசுல, ‘மே ஹ்ருதிஎன்னுடைய ஹ்ருதயத்தில், ‘சிதேகா ஷடாஸ்யாஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு சித்’, ஒரு ஒளி, ‘த்யோததேபிரகாசிக்கறது. ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது.

அதுனால முகாத்என்னுடைய வாக்கில் இருந்து, முகத்தில் இருந்து, ‘கிரஸ்சாபி சித்ரம்ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம் நிஸ்ஸரந்தேவெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது”, அப்படீன்னு சொல்றார்.

மஹான்கள் எல்லாருக்குமே வாக் எங்கிறது பகவான் கொடுத்தது, அப்படீங்கிறதை அவா ரொம்ப feel பண்றா, நிறைய அருட்கவிகள் அந்த மாதிரி சொல்றா, இது humility, ஆனா தெய்வம் நினைக்கிலேன்னா இந்த மாதிரி அருமையான வாக்கு வந்து விழ முடியுமா?

முருகப்பெருமானோட அருளால வாக்கு வந்ததுனா இன்னும் அருணகிரிநாதர் இருக்கார். அருணகிரி, உடம்பு வியாதி வந்து, ரொம்ப நொந்து போய், திருவண்ணாமலையில கோபுரத்துல இருந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கனும்னு நினைச்ச போது, பகவான் அவரை கையில தாங்கி உயிரைக் காப்பாற்றி சும்மா இரு சொல் அறன்னு உபதேசம் பண்றார்

அவர் அந்த மண்டபத்துலேயே, உக்காந்துண்டு ஒரு கார்யமும் பண்ணாமல், ஒரு பேச்சும் பேசாமல், அந்த முருகப் பெருமானுடைய தரிசனத்தையும், அந்த முருக நாமத்தையுமே த்யானம் பண்ணிண்டு, பன்னிரண்டு வருஷம் தபஸ் பண்ணினார் ன்னு சொல்லுவா. அப்ப முருகப் பெருமான் திரும்பவும் தரிசனம் கொடுத்து அருணகிரி முத்து முத்தா என்னை பாடுன்னு சொல்றார்.

முத்தைத் தருபத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

அப்படீன்னு ஆரம்பிச்சு சந்தத்தமிழ்ல, அருணகிரி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடறார்

அந்த மாதிரி, இந்த ஸ்லோகத்துல தெரிஞ்சிக்க வேண்டியது என்னென்னா, முருகப் பெருமானுடைய அருள் இருந்தா பாண்டித்யம் வரும். நல்ல வாக்கும் வரும்கிறது தெரியறது.

அப்படி அந்த முருகனுடைய அருளால் நான் இந்த, சுப்ரமண்யரை ஸ்தோத்ரம் பண்ணப் போறேன், புஜங்கத்தை பாட போறேன்”, ன்னு ஆச்சார்யாள் சொல்றார்

. எல்லா வார்த்தைகளுக்கு பொருள் பகவான் போட்டது, ‘ஹிமம் அப்படீன்னா பனி, ‘கிரி’, அப்படீன்னா  மலை, ‘ஹிமகிரிஅப்படீன்னா Himalayas, அங்கே வடக்கே இருக்கிற அந்த பனி மலைக்கு அந்த வார்த்தை.

 ‘ஹிமகிரிதனயான்னா, பார்வதி தேவிஅம்பாள், அப்படி ஒவ்வொரு வார்த்தையை சொன்ன உடனே, அந்தந்த விஷயம் நமக்கு ஞாபகம் வரதில்லையா? ‘ஹிமம் ன்னா பனி ஞாபகம் வரது,  ‘கிரி-ன்னா  மலை ஞாபகம் வரது, ஹிமகிரி ஹிமவான்னா வடக்குல இருக்கிற ஒரு பெரிய பனி மலை ஞாபகம் வரது, ‘ஹிமகிரிதனயா’-ன்னா அம்பாள் ஞாபகம் வரது. இப்படி வார்த்தைகளுக்கு பொருள்கள்-ங்கிறது பகவான் போட்டது, அப்படீன்னு சாஸ்த்ரத்துல இருக்கு.

அதோட ஒவ்வொரு காலத்துல பொருள் கொஞ்சம், கொஞ்சம் மாறுகிறது, connotation அப்படீன்னு சொல்லுவா. இந்த இடத்துல  இந்த பொருள் எடுத்துக்கணும், அப்படிங்கிறது, அது அழகா அமையணும். மஹான்களோட வாக்கு தான் என்றைக்கு எடுத்தாலும் அந்த மாதிரி சந்தோஷப் படும் படியா, எல்லா காலத்துலேயும் மங்களகரமான அர்த்தங்களே வரும் படியான வாக்குமஹான்களுக்கு இறையருளால் கிடைச்ச வாக்குல தான் அந்த மாதிரி இருக்கும். அப்பேற்பட்ட இந்த ஸுப்ரமண்ய புஜங்கம். இந்த ஸ்லோகத்தை இன்னோரு வாட்டி படிச்சு முடிக்கறேன்.

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்                                                                             ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்                                      |                                  சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே                                  முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் |

ஹ்ருதய கமலமாகிய குஹையில வசிக்ககூடிய முருகப்பெருமானுடைய அருளால், நான் இந்த ஸ்லோகத்தை பண்ணி, இந்த ஸ்லோகத்துடைய கர்த்தா, அப்படீங்கிற கீர்த்தி எனக்கு வர போறது. ஆனா, எதிர்ல நிற்கிற இந்த ஸ்வாமிதான் என்னை பேச வைக்கிறார்”, அப்படீன்னு சங்கரரும் ஆஸ்ச்சர்ய படறார், இதை கேட்கறவாளும் ஆஸ்ச்சர்ய படறா. இன்னைக்கும் நாம ஆஸ்ச்சர்யபட்டு இந்த ஸ்லோகத்தை படிச்சிண்டு இருக்கோம்அப்பேற்ப்பட்ட முருகனுடைய  அருள். இந்த ஸ்லோகத்துல ஆசார்யாளோட வினயம், முருகபெருமானுடைய அருள்  ரெண்டும் வெளிப்படறது.


அடுத்ததா மயூராதிரூடம்என்கிற                                                                                                  சுப்ரமண்ய புஜங்கத்தின் மூன்றாவது                                                                                             ஸ்லோகத்தை பார்க்கலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரோ ஹரா

 

No comments:

Post a Comment