Wednesday, January 11, 2023

 சிவதாஸன் ஜகன்நாதனின் 

சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி 

பாடல்கள் 21 முதல் 25 வரை

கார்த்திகையில்தீபமாயருணையிலேஜொலிப்பவனே                                                      மார்கழி திரையில் தில்லையிலாடும் நடேசனே                                                             வார்த்தவடிவழகியைசித்திரையிலேமணந்தசொக்னே                                        ஆர்த்தன்புடன்கூடினோம்பரமனேபள்ளிஎழுந்தருளாயே     21

வெண்பனி கயிலையில் மோனத்தில் அமர்ந்த வனே                                                  பண்ணமுதப்  பேரெழிலாள் சிவகாமியுடன்ஆடிய பரமனே      வெண்காட்டில்ஸ்வேதேஸ்வரனாய்உறை விமலனே                            பண்ணோடுனைப்பாடபரமனேபள்ளிஎழுந்தருளாயே  22

ஐந்தெழுத்துநமசிவாயமாய்த்திகழ்பவனேமுடிஉனதடி                                                வைத்துனைத்தொழுவோர்வம்சம்காக்கும்வள்ளலேஅம்பு      எய்துதிரிபுரமெரித்து அகிலம் காத்த லோகநாயகனே      பைந்தமிழாலுனைப்பாட பரமனேபள்ளி எழுந்தருளாயே   23

அறுபத்துநான்குவிளையாடலைமதுரையிலேகாட்டினாய்                                      அறுபத்துமூன்றடியாருக்குஅருளிநாயன்மாராக்கினாய்                                       அறுபத்து நான்கு ரூபங்கள் கொண்டு திருவருளினாய்   தீது                          அறுபக்தியுட்ன்தொழுதோமேபரமனேபள்ளிஎழுந்தரு 24

யுகம் க்ருதாவில் அக்னிமலையாய் அருளிய அருணனே                              யுகம்த்ரேதாவில்மாணிக்கமலையான மஹேஸ்வரனே                                    யுகம்துவாபரால் ஸ்வர்ணமலையாய்விளங்கியவிமலனே                                      யுகம்கலியில்மரகதமலையாயபரமனேபள்ளிஎழுந்தருளாயே  25


இத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் 

நாளைம் மீண்டும் சந்திப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

11-01-2023 

No comments:

Post a Comment