Thursday, May 9, 2013


ஈசனும் நேசனும்
அஞ்செழுத்து நீயேயானாய் அருள்மிகு அந்தமில்சர்வேசா
விஞ்சு ஆறெழுத்துருக்கொண்டாய் குழந்தை வடிவேலா
துஞ்சுவோர் எண்னமதிலும் நிறைந்தாய் தூய கங்காதரா
அஞ்சேல் என்றருள் முத்திரை காட்டினாய் முத்தழகு செவ்வேளே
நஞ்சுண்டு கண்டம் கருத்து அண்டம் காத்தாய் திருநீலக்ண்டா
வஞ்ச நெஞ்சம் கொண்ட வல் சூரனை ஆட்கொண்டாய் செந்தில்நாதா
பஞ்சாய் வந்த்துன்பமெல்லாம் பறக்கவைத்தாய் பரம தயாளா
கொஞ்சுமொழி வள்ளியொடு விளையாடினாய் தணிகைவேலவா
விஞ்சிநிற்பது வானமெனப் பரந்த பரமேசன் அருட்கருணையோ
கிஞ்சித்தும் குறையாத அப்பனுக்குறைத்த குமரேசன் திருவருளோ  1

ஓங்காரமே உருவான சம்போ சங்கரா சர்வேசா
ஓங்காரத்துக்குப்பொருளுறைத்த கந்தா கதிர்வேலா
பாங்காய்ப் பந்நாகம் கபாலமோடணி மஹேஸ்வரா
ஈங்கிங்கு எமையாள மயில்மீதுவந்த முருகேசா
நாங்கள் நாளும் உள்ளம் உருகிப்பாடும் பரமேசா
ரீங்காரமிடும் வண்டு மொய் மலர்சூழ் சோலைமலையழகா
சங்காரமூர்த்தியே காலனை உதைத்துபாலனுக்கருளியவா
ஆங்காரம் கொண்ட சூரனை வென்று அருளி ஆட்கொண்டவா
எங்கும் நிறை சங்கரன்சாமி அருள் மழைபொழிவார்
கங்காதரன் மகன் கந்தசாமி அருள் வெள்ளம் பெருக்குவார்  2


பரிவுடனே பக்தரை அனுக்ரகித்தருள்வார் பாசமிகு பரமேசன்
வருமடியார் வல்வினையறுத்து வளமளிப்பார் குணமிகு குமரேசன்
கரித்தோல் போர்த்தி காமாட்சியை மணந்தார் கள்ளன் ஏகமபன்
வரிவளைக்கரத்தாள் வள்ளி மனம் கவர்ந்து மணந்தார் தணிகாசலன்
பிரியா மங்கை இடப்புறமும் பெருகுகங்கை முடிமீதும் கொண்டார் ஈசன
உரிமையோடு தேவானையும் வள்ளியும் இருபுறம் கொண்டார் முருகேசன்
திருவெண்ணீறுஅங்கமெங்கும் பூசி மகிழ்ந்து வருவார் வெண்ணீற்றர்
பெரு மணமிகு சந்தனம் பன்னீர் பிரியமுடணிவார் வடிவேலழகர்
உருகுவோர் உள்ளத்தில் நாளும் குடிகொள்வார் உலகாளும் ஈசன்
மருவிலா பக்திகொண்டோர் மனமதில் மகிழ்வோடாள்வார் குஹன்  3


அடிமுடி மால் அயன் அறியவொண்ணா பெரு உருவுடை ஈசன்
வடிவழகு வளமை மிக்க்கொண்ட திரு உருக்கொண்ட குஹன்
பிடியிடையுடை உமையம்மை மனம் மகிழ் பெரு மஹேசன
கடிமணம் கானகத்தரசி கொடிவள்ளியைக்கொண்டார் குமரேசன்
அடிநாடி கிரிவலம் வருமடியார்க் கருள்வார் அருணாசலேசன்
மடிநிறைந்து கன்று நாடும் பசுபோல் நாடியருள்வார் செந்திலாண்டவன
முடிமீது இளமதி என்றும் கொண்டு அகிலம் காப்பார் கைலாயவாசன்
தடிகைக்கொண்டுநின்று தவறாது அடியாரைக்காப்பார் பழனிவேலன்
இடிதோன்றும் பரந்த வானினும் மிகுந்த அருள் தருவார் நம் அப்பன்
அடியாழம் காண்வொணாப்பரந்த கடலினுமிக்கருள்தருவார் நம் சுப்பன்  4



நாதவேத்தலைவன் ஞாலமெல்லாம் வணங்கும் நம் நாகபூஷன
நாத நாயகன் நால்வேத்த்த்லைவன் பெற்ற செல்வன் கந்தன்
வேதமே தானேயான வித்தகன் விண்ணவர் கோன் விகிர்தன்
வேதநாத்த்துக்கு விளங்கு பொருள் சொன்னவன் வடிவேலழகன்
காதலாகிக்கசிந்துருகுவார் கண்ணீர் துடைப்பவன் கைலாயன்
காதலே மிகுந்து கரம் குவிப்பார் கர்மவினை அறுப்பவன் கதிர்வேலன்
மாதொரு பாகராய் மகிழ்வுடன் மங்கலங்களரும் மன்னவ்ன் மகேசன்
மாதிருவர் உடனுறை மாதவன் மருகன் மலமகற்றுபவன் முருகன்
பாதம் நாளும் நான் பணிந்திட நல்லருள் செய்வார் பரமேசன்
பாதம் நான் சென்னியில் வைத்தடிதொழ கருணை செய்வார் குமரேசன் 5

பெருவுடை ஈசன் திருவருட்செய்த தலங்கள் எட்டு
திருவுடை வேலன் மருவிய் அருள்மிகு தலங்கள் ஆறு
கரு நிறம் கண்டம் கொண்ட்மருதீசர் ஆலகாலமுண்டார்
உருவடிவழகுடை திருக்குமரன் பெரு வேல் கைக்கொண்டார்
மருவிலா இளமதிமுடிசூடி ஈசன் திருத்தாண்ட்வமாடினார்
பெரு மயிலேறி பறந்துவந்து வடிவேலன் பக்தற்கருளினார்
தரும் வரங்கள் தடையின்றி விகிர்தர் வேண்டுவோர்க்கருளினார்
அருள் வெள்ளம் கருணைப்பார்வையாலே கந்தன் மிகப்பொழிந்தார்
அருணைவாழ் அந்தமில் கிரிவாசன் நம்மைக்கரை சேர்ப்பார்
கருணையே உருவான் கந்தவேள் என்றும் நம்மைக்காத்தருள்வார்  6

திருவருள் நிறை முகங்கள் ஐந்து கொண்டு அருள்வார் ஈசன்
திருவழகு முகங்கள் ஆறு கொண்டு ஆள்வார் நம் நேசன்
திருவைந்தெழுத்து நமசிவாயமாவார் திருக்கைலாய வாசன்
திருவாறெழுத்து சரவணபவ்வார் செந்தில்வாழ் திருக்குமரேஸ்ன்
திரி சூலம் கைக்கொண்டு அண்டம் காப்பார் அகிலாண்டேசன்
திருசக்திவேல் கைக்கொண்டு வருமடியாரைக்காப்பார் வேலாயுதன்
திருவட்ட வீரத்தலங்களில் வீரம் காட்டினார் வீரசிவனார்
திருவாறுபடைத்தலங்க்ளில் வீடு கொண்டார் வடிவேலனார்
திருவடி தொழுவார்க்கு தக்க தருணமதில் அருள்செய்வார் ஈசன்
திருவடி நாடி வருவார்க்கு நாளும் வினைதீர்த்தருள்வார் நேசன் 7









No comments:

Post a Comment