Monday, March 12, 2012


ஒரு இடைவெளிக்குப்பின் சந்திக்கின்றோம்

  பல சொந்த காரணங்களினால் நம் சந்திப்பு கொஞ்ச நாள் தடை பட்டதற்கு வருந்துகிறேன்.
  இறை பூஜையின் போது அவருக்கு பதினாறு வகையான உபசாரங்கள் செய்து பூஜிக்க வேண்டும்.அவைகளை சோடேச உபசாரங்கள் என்று சொல்வார்கள்
1.ஆசனம்                  இருக்கை அமைத்தல்
2.பாத்யம்                  பாதங்களில் நீர்விட்டு சமர்ப்பித்தல்  அடி நீர்
3.அர்கயம்                  முடியில் நீர்விட்டு அபிஷேகித்தல்   முடி நீர்
4.ஆசமனீயம்               அருந்தநீரளித்தல்                   குடி நீர்
5.ஸ்னானம்                     அபிஷேகித்தல்
6.வஸ்த்திரம்               ஆடை அணிவித்தல்
7.உபவீதம்                 முப்புரி நூல் அணிவித்தல்
8.கந்தம்                    சந்தனம் அணிவித்தல்
9.அக்ஷதான்                அக்ஷதை அளித்தல்
10.புஷ்பம்                   மலரணிவித்தல்
11 தூபம்                   தூபம அளித்தல்
12தீபம்                    தீபாராதனை செய்தல்
13.நைவேத்யம்             நைவேத்யம் செய்தல்
14.தாம்பூலம்               தாம்பூலமளித்தல்
15.ப்ரதக்ஷினம்              வலம் வருதல்
16.நமஸ்காரம்              மனமுருகி விழுந்து வணங்குதல்
  இந்த பதினாறு உபசாரங்களை தினமும் ஈசன் முன் செய்வதால் சிவ பூஜை செய்த பலன் நிறைவுறும் அவர் மனமகிழ்ந்து நலங்களும் வளங்களும் அபரிமிதமாக தந்த்ருள்வார்                   

No comments:

Post a Comment