Monday, March 19, 2012


ருத்ராக்ஷம்
   ருத்ராக்ஷம் என்பது ருத்ரரின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர்த்துளிகள் திடஉருவம் பெற்று உண்டானவையாகும் ருத்ரரின் கண்களிலிருந்து உண்டானதால் ருத்ர அக்ஷம் எனப்பெயர் பெற்றது
   பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவனடியார்களுக்கு உத்ராக்ஷம்
அவசியமானதாகும்
  ருத்ராக்ஷத்தை தரிசித்தால் லக்ஷம் மடங்கும் தொட்டால் கோடி மடங்கும் அணிந்தால் நூறு கோடியும் ஜெபித்தால் ஆயிரம் கோடி மடங்கும் புண்ணியம் உண்டாகும் என்றும் புரானங்கள் கூறுகின்ற்ன
   ருத்ராக்ஷம் பல முகங்களில் கிடைக்கின்றது
ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு
 ஒரு முகம் பரம ஸ்வரூபம்
இரு முகம் அர்த்தனாரீஸ்வரஸ்வரூபம்
மூன்று முகம் த்ரிகாக்னி ஸ்வரூபம்[மூன்று அக்னிகள்]
நாங்கு முகம் ப்ரம்மஸ்வரூபம்
ஐந்து முகம் ஈஸ்வரஸ்வரூபம்
ஆறுமுகம் சுப்ரமண்யஸ்வரூபம்
ஏழுமுகம் சப்தமாதாஸ்வரூபம்
எட்டுமுகம் அஷ்டவசுக்கள் ஸ்வரூபம்
ஒன்பது முகம் நவசக்திஸ்வரூபம்
ப்த்து முகம் எம ஸ்வரூபம் [எம பயம் போக்கி ஆயுள் விருத்தி அளிக்கும்]
பதினொரு முகாதிப்தி பதினொரு ருத்திரர்
பன்னிரண்டு முகம் மஹாவிஷ்னு ஸ்வரூபம்
பதிமூன்று முகம் காமதேவஸ்வரூபம்
பதினாங்கு முகம் சகல சௌபாக்யமும் அருளவல்லது

   108 ருத்ராக்ஷங்களை கொண்ட மாலையை அணிபவந் பல அஸ்வமேத யாகங்களை செய்த பலனை அடைகின்றான்
  ருத்ராக்ஷத்தின் அடி ப்ரம்மா உடல் விஷ்னு முகம் ஈஸ்வரன்
  ருத்ராக்ஷ மாலை கொண்டு ஜெபித்தால் அதிக பலம் அதிக் புண்ணியம் உண்டாகும்
  இரு முகம் ஐந்துமுகம் பதினொறுமுகம் மற்றும் பதினாங்கு முகங்களை கொண்ட ருத்ராக்ஷங்களை அணிவது சிறப்புடயதாகும்
ஆயமாமணி ஆயிரம் புணைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப்பரமனெனப் ப்ணிகுவார் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மணிதரோ சொல்வீர்
  என்று ருத்ராக்ஷத்தின் பெருமையை பிரமோத்திர காண்டம் சிறப்பித்து கூறுகின்றது

ருத்ராக்ஷம் அணிந்து ஈசனருள் பெறுவோம்


No comments:

Post a Comment