Friday, October 24, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -73

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வெள்ளி, 24,  அக்டோபர், 2025                            

அனைவருக்கும் வணக்கம்.          


இன்று நாம் அம்பாளின் எழுபத்து மூன்றாவது திவ்ய நாமாவளியைப் பற்றிப்பார்ப்போம்

இந்த நாமாவளி அம்பாளின் இருபத்து எட்டாவது ஸ்லோகத்தில் வருகின்றது
.

அம்பாள் தன்னுடைய சக்தி சேனைகள் பண்டாசுரனின் படைகளை அழித்ததைக் கண்டு பெரும்கிழ்ச்சி கொண்டாள்.மேலும் தன்னுடைய நித்யா தேவிகள் எனப்படும்பதி நான் கு தேவிகளின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு ஆர்வத்துடன் கவனித்து பெருமையுற்றாள்

 

73. நித்யா பராக்ரமா டோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா

நித்யா    ==== நித்யா தேவியர்கள்

பராக்ரமா ==== ப்பராக்ரம்ம், வீரியம்

டோப ==== பெருமை

நிரீக்ஷண ==== பார்த்தல்,காணுதல்,கவனித்தல்

ஸமுத்ஸுகா ==== ஆர்வப் பெருக்குடனிருத்தல்

அம்பாள் நித்யா தேவிகளின் பராக்ரமத்தையும் வீரியத்தையும் கண்டு ஆர்வப் பெருக்குடன் கவனித்து மகிழ்பவள்

நித்யா என்றால் திதி. நித்யா தேவியர்கள் (71 ஆம் நாமத்தைப் பார்க்கவும்). பதினான்கு பேரும் ஒரு திதிக்கு ஒருவ்ராக விளங்குபவர்கள்.அம்பாளே பத்னைந்தாம் நாளான அமாவாஸ்யை அல்லது பௌர்ணமி திதியின் தேவியாக விளங்குகி
றாள்.
போரின் போது இந்த பதினைந்து திதி நித்யா தேவிகளின் வீரத்தைக் கண்டு லலிதா மகிழ்ச்சியடைந்தார்.

பண்டாசுரன் தனது படைத்தலைவர்கள் பதினைந்துபேரை போருக்கு அனுப்பினான்.அவர்களை எதிர்த்து அழிக்க அம்பாள் தனது பதினான்கு நித்யா தேவிகளை அனுப்பி அவர்களின் வீர பராக்ரமத்தைக்கண்டு பரவசமுற்றாள்.

என்றும் நிலைத்திருப்பதாலாத்ம சக்திகள் நித்ய சக்திகள் என்வும் வழங்கப் படுகின்றனர்.

இருமை அழிக்கப்பட்டு, மாயாவின் திரை நீக்கப்படும்போது, ​​பிரம்மத்தைப் பற்றிய அறிவு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடையப்பட்ட ஆன்மீக முன்னேற்றத்தை அவ்வளவு எளிதில் மாற்றியமைக்க முடியாது (விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதை மாற்றியமைக்க முடியும் என்றாலும்). இதுவே இந்த நாமத்தின் ரகசிய அர்த்தம்.

 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை எழுபத்துமூன்றாவது நாமாவளியின்விளக்கமோடுசந்திப்போம்                                                                                                                  

இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றிவணக்கம்.                                                                                                  

 ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வெள்ளி, 24,  அக்டோபர், 2025                            


No comments:

Post a Comment