Wednesday, October 8, 2025

 


தினம் ஒரு லலிதா நாமம்----49, 50 & 51

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன் கிழமைஅக்டோபர்,8 ,2025

அனைவருக்கும் வணக்கம்.                                                                                                                     இன்று நாம் அம்பாளின் நாற்பத்து ஒன்பது ,ஐம்பது மற்றும் ஐம்பத்தொன்றாவது என மூன்று திவ்ய நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் நளினமான அழகின் நளின லாவண்யத்தையும் அதன் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமங்கள்  அம்பாளின் இருபத்தொன்றாவது ஸ்லோகத்தில் வருகின்றன

 

49.சர்வாருணா

ஸர்வ

எங்கும், முழுவதும்                                                                                                 

அருண

மாணிக்கம் மற்றும் காலை சூரியனின் சிவப்பு

 

தனது தேகம் முழுவதும்,ஒவ்வொரு அங்கமும் காலைக் கதிரின் நிறம் போன்றும்,மாணிக்கத்தின் நிறம் போன்றும் சிவந்து விளங்கக் கொண்டவள்.அம்பாள் அக்னிகுண்ட்த்திலிருந்து உதித்து எழுந்து வந்ததனால் மட்டும் சிவந்தவள் அல்ல.அதன் பின்னும் தன் அங்கங்கள் அனைத்தும் செந்நிறமாக மிளிர்ந்து ஒளிரக் கூடியவள்.இந்த செவ்வொளி அம்பாளுக்கே உரிய நிறமாகும்

சர்வம் + அருணம் = சிவப்பு நிறத்தில் உள்ள அனைத்தும். அவளுடன் தொடர்புடைய அனைத்தும் சிவப்பு. இந்த உண்மை பல்வேறு நாமங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்ய லஹரி (பாடல் 93) கருணா காசித் அருணா என்று கூறுகிறது பொருள், சிவப்பு நிறத்தில் உள்ள அவளுடைய கருணை புரிந்துகொள்ள முடியாதது என்று கூறுகிறது.

அதே நாமம் லலிதா திரிஷதியிலும் (138) உள்ளது. ர் வேதம்யஜு (4.5.1.7) 'சய்சாசௌ யஸ்தாமிரோ, அருணா உத பப்ருஹ் சுமங்கலாஹ்' (இது ஸ்ரீ ருத்ரம் 1.7 இன் கீழ் வருகிறது)                                                                                          இது அருணா (டியற்காலையில் சூரியனின சிவப்பு நிறத்தில் உள்ளது, இது மங்களகரமானது என்று கூறுகிறது. 'சிவப்பின் நிறம் மங்களகரமானது' என்று ஸ்ருதி (வேதங்கள்) கூறுகிறது. அவளுடைய நிறத்தை அறிய வேறு எந்த விளக்கமும் தேவையில்லை.

50. அநவத்யாங்கி

 

அன்

 மறுக்கும் ,அல்லாத                                                                                           

அவத்ய,                                                                           

கீழ்மையான ,தரமற்ற

அங்க

அங்கம், உடல் உருப்புகள்

 

ஏதேனும் ஒரு சிறு குறைபாடு கூட இல்லாது நிறைவு பெற்ற பேரழகோடு அம்பாளின் உடல் விளங்குகிறது. அம்பாளை கேசாதி பாதமாகவும் ,பாதாதி கேசமாகவும் தேவர்கள் கண்டாலும் அவள் அழகிலே எந்த சிறு குறைவுமில்லை. அந்த திவ்ய அழகு பேரானந்தத்தை தருகின்றது

                                                                                                                                                         அவளுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் குறைபாடற்றது, சமுத்திரிகா லட்சணம் அல்லது சாஸ்திரத்திற்கு இணங்க உள்ளது. அவள் நிர்குண பிரம்மம் (பண்புகள் இல்லாமல்) கண்ணுக்கு புலப்படாத பண்புகளுடன் விளங்குகிறது.

அவள் சகுண பிரம்மம் என்று அழைக்கப்படும்போது அவள் வடிவம் மற்றும் பண்புகளுடன் இருக்கிறாள்.

அம்பாளை சகுண வடிவிலும், நிர்குண வடிவிலும் நாம்

விமர்சிக்கிறோம். சகுன வடிவம் உருவமுள்ளது,.நிர்குண ஸ்வரூபம் உருவமற்றது ,ஞானத்தினால் மட்டுமே உணரக்கூடியது   

51.ௐம் ஸர்வாபரணபூஷிதா

ஸர்வ

அனைத்துவிதமான                                                                                  

ஆபரண அணிகலன்கள்                                                                   

ஆப்ரன்ங்கள்,

பூஷிதா

அணிந்திருப்பவள்

                                                            

அம்பாள் அனைத்துவிதமான ஆபரணங்களையும் அழகுடன் அணிந்துள்ளாள்.பொதுவாக அழகில் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் குறைபாடுகளை மறைக்கவே பல ஆபரணங்களை அணிவார்கள்.ஆனால் அம்பாள் பேரழகே உருவானவள். இந்த ஆபரணங்கள் அவளின் பேரழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.அம்பாள் அணிவதால் இந்த ஆபரணங்கள் அழகுபெறுகின்றன

ம்பாள் எல்லா வகையான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்.. காளிகா புராணம் நாற்பது வகையான ஆபரணங்களைக் குறிப்பிடுகிறதுலலிதா திரிஷதியில் உள்ள 140 ஆம் நாமம் அதே பொருளைத் தருகிறது.

அவளுடைய உடல் வடிவத்தின் விளக்கம் இந்த நாமத்துடன் முடிவடைகிறது என்று பலர் நம்பினாலும், சில அறிஞர்கள் உடல் விளக்கம் 55 ஆம் நாமத்துடன் மட்டுமே முடிவடைகிறது என்று கருதுகின்றனர். இருப்பினும் 48 முதல் 51 வரையிலான பகுதிகள் அவளுடைய பிரகாச ரூபமான நிர்குண ரூபமான விமர்ச வடிவத்தையும் இணைக்கின்றன.

அடுத்த நாமாவளியிலிருந்து அம்பாளின் இருப்பிடம் பற்றிய வர்ணனைகளை நாளை முதல் பார்ப்போம்.

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை நாற்பத்து எட்டாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்                                                                                                                    இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                   

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன் கிழமைஅக்டோபர்,8 ,2025


No comments:

Post a Comment