Friday, April 14, 2023

 




 

மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்

 இண்று மங்கலமான சோபக்ருது வருடம் பிறக்கின்றது இந்ந்ந்நாளில் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கமும்

சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ராஜாபதியாகவும் வருவதால் நாட்டில் கல்வி, கலைகள், தொழில்கள் செழிக்கும்.                                                             மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும்.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது! எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.

. கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம். இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.

. புத்தாண்டின் தொடக்கமாக சித்திரையில் தான் வேங்கை மரம் பூக்கும். தமிழ் புத்தாண்டின் சிறப்பை பற்றி சங்க இலக்கிய நூலான நெடுநெல்வாடையில் கூட மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

 சித்திரை நமக்கு மட்டுமல்ல இலங்கை, மியான்மர், கம்போடியோ உள்ளிட்ட நாடுகளுக்கும் சித்திரை முதல் நாள்தான் புத்தாண்டு! தமிழ் வேந்தர் ராஜராஜ சோழன் எந்தந்த நாடுகளை ஆண்டாரோ அங்கெல்லாம் சித்திரை ஒன்றுதான் புது வருடப்பிறப்பு

இப்படி அற்புதமான சிறப்புகள் வாய்ந்த வரப்போகும் தமிழ் புத்தாண்டு இந்த வருடம் எப்படி இருக்கும் என பார்ப்போம்.

வரப்போகிற தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடம் அனைவருக்கும் ஒரு அற்புதமான வருடமாக இருக்கப்போகிறது.

இந்த சோப கிருது வருடம் அறுபது ஆண்டு கணக்கு சுழற்சியில் வரும் 37வது ஆண்டு ஆகும். தமிழில் இந்த ஆண்டுக்கு மங்கலம் என்று பொருள். மங்கலம் என்றால் நன்மையான விசயங்கள் இந்த வருடத்தில் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்!

இந்த சோப கிருது வருடம் 14-4-2023 அன்று திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறக்கிறது.

இதை சோப கிருது வருடத்தில் உள்ள வெண்பாவே நமக்கு உணர்த்துகிறது. இடைக்காடர் சித்தர் அறுபது வருடங்களுக்கும் அதாவது ஒவ்வொரு தமிழ் வருடங்களுக்கும் ஒவ்வொரு வெண்பா எழுதி இருப்பார். அதனடிப்படையிலே அந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்த சோப கிருது வருடத்தின் வெண்பா என்னவென்றால், "சோபகிருது தன்னிற் நொல்லுவதெல்லாம் செழிக்கும்! கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள் உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம் உண்டாகுமன்றே யுரை!"

 இந்த வெண்பாவின் பொருள் என்னவென்றால் சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பாரம்பரியமான ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும்.  எங்கும் செல்வம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும். உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது பெய்யும். எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. சஸ்யாதிபதியாக சந்திரன், ராஜாதிபதியாக புதன், நீராதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகிறார்கள். சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ராஜாபதியாகவும் வருவதால் நாட்டில் கல்வி, கலைகள்,தொழில்கள் செழிக்கும்..

அனைத்து வகை பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நல் விளைச்சலை கொடுக்கும். அருமையாக மழை பொழிந்து நாடு செழிக்கும். அனைத்து துறையினரும் மேன்மை அடைவார்கள். ஆன்மிகமும், ஜோதிடமும் செழிக்கும். தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேன்மை பெறும்.

இந்த ஆண்டு 5 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழை உண்டு குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். தானிய உற்பத்தி, உப்பு உற்பத்தி அதிகரிக்கும். மருத்துவ துறையில் புது கண்டுபிடிப்புகள் உண்டாகும். சில நேரங்களில் மருந்து பற்றாக்குறை ஏற்படும்

 நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் உண்டாகும். விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். பட்டுசேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்

 அனைத்து நாடுகளிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் சமாதானம் உருவாகும். எல்லை பிரச்சினைகள் தீரும். உலகில் சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமும், அமைதியும் உண்டாகும்.. பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். அதேபோல் பருத்தியும் அமோக விளைச்சலை கொடுக்கும்.

 இந்த சோபகிருது வருடத்தில் மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளது. அதில் 3 சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளது. இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும்.

வரப்போகிற தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்ய வேண்டும்! முதல் நாள் இரவே நாம் இல்லத்தை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அதே போல் மா, பலா, வாழை என முக்கனிகளையும் வாசலில் கட்டலாம். புத்தாண்டு அன்று அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்றுவர வேண்டும்.

 நல்ல நேரத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருக்க வேண்டும். மதிய உணவு சைவ உணவாக இருத்தல் வேண்டும். அன்றைய தினம் ஐந்து வகை கூட்டு பொரியலுடன் சாம்பார் சாதம் செய்து தெய்வத்தை வணங்கி விட்டு மதிய உணவை உண்ணலாம்.

 விவசாயிகள் அன்றை தினம் வயலில் சென்று பூமி தாயை வணங்குவது சிறப்பு! அன்றைய தினம் வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பொன்னேர் பூட்டுதல் நிகழ்வை வைக்கலாம். இந்த தமிழ் புத்தாண்டில் புதிதாக தொழில் தொடங்க சிறந்த நாளாகும். இன்றைய நாளில் தொழில் தொடங்கினால் அபார வளர்ச்சி கிடைக்கும். அதே போல் தொழில் துறையினர், கல்வி கற்றபவர்கள், விவசாயிகள் இன்றைய தினம் புதிய முயற்சியை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.

 பண்டிகைகள் என்பது நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது! பண்டிகைகள் கொண்டாடுவதின் நோக்கமே பழைய துன்பங்களை மறந்து புதிதாக வாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காகதான். நாம் அனைவரும் வரும் தமிழ் புத்தாண்டில் பழைய கசப்பான விசயங்களை மறந்து, துன்பங்களை மறந்து நல்ல தூய மனதோடு இந்த புத்தாண்டை கொண்டாடுவோம். கண்டிப்பாக இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான வருடமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!

தொகுப்பு :-  சிவதாஸன் ஜகன்நாதன்


No comments:

Post a Comment