ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனி,மார்ச், 8,
2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து ஐந்து பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து ஆறாவது பாடலைப் பார்ப்போம்.
இந்தப் பாடலில் பட்டர் தன் ஒரு சிறியோன் என்றும் வல்லமை அற்றவன் என்றாலும் தான்
புனையும் பாடல்கள் பொருளற்றவையாயிருந்தாலும் அவஈகளின் இடையிடையே அம்பாளின் நாமங்கள்
வருவதால் அவை சிறப்படைகின்றன எங்கிறார்
கவிஞராக
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே
சிறியேன், |
மிகச் சிறியவனான நான் |
வல்லபம் |
பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் |
ஒன்றறியேன் |
சாமர்த்தியமும் உடையவன் இல்லை. |
செம்பல்லவம் |
சிவந்த தளிர் போன்ற |
நின் மலரடிச் |
உன் மலர்த் திருவடிகளைத் |
அல்லது |
தவிர்த்து வேறு ஒரு |
பற்றொன்றிலேன், |
பற்றுதல் இல்லாதவன் நான் |
பசும் |
பசும்பொன்னால் |
பொற்பொருப்பு |
ஆன மேருமலையை |
வில்லவர் |
வில்லாக எடுத்த |
தம்முடன் |
சிவபெருமானுடன் |
வீற்றிருப்பாய் |
அமர்ந்திருப்பவளே |
வினையேன் |
தீவினைகள் பல புரிந்துள்ள நான் |
தொடுத்த |
தொடுத்துத் தரும் |
சொல் |
இந்த சொற்கள் |
அவமாயினும் |
உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல்
இருந்தாலும் |
நின் |
அவை உன் |
திருநாமங்கள் |
திருநாமங்களைச் சொல்லித் |
தோத்திரமே |
துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். |
பொருள்:
வல்லபம்
ஒன்றறியேன் – பெரும்
செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை.
சிறியேன் – மிகச்
சிறியவன்
நின் மலரடிச்
செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன் – சிவந்த தளிர்
போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான்.
பசும்பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் – பசும்பொன்னால்
ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே
வினையேன்
தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே – தீவினைகள் பல
புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக
இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(உரை):
பசும்பொன்
மலையாகிய மேருவை வில்லாகக் கொண்ட சிவபெருமனுடன் கவலையின்றி எழுந்தருளியிருக்கும்
தேவி, அறிவாற்றல்
ஒன்றையும் அடியேன் அறியமாட்டேன்; சிற்றறிவினனாகிய
யான் எங்கும் வியாபித்தநின் திருவடியாகிய சிவந்த தளிரையல்லாமல் வேறொரு
பற்றையுடையேன் அல்லேன்; தீவினையையுடைய
யான் அந்தாதியாகத் தொடுத்த சொற்கள் பொருளில்லாத வீண் சொற்களாயினும் இடையிடையே
வைத்த நின் திருநாமங்கள் தோத்திரமாக உதவும். (ஆதலின் நான்
தொடுக்கும் அந்தாதி பயன் உடையதேயாம்).
விளக்கம்:
ஏ, அபிராமித்தாயே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின்
இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற்
குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி,மார்ச்,
8, 2025