ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி –196,197 &198
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழக் கிழமை,11, டிஸம்பர்,
2025
அனைவருக்கும் வணக்கம்.
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நாம் தற்பொழுது
அம்பாளின் சகுண
வடிவங்கள் பற்றி, பார்த்து வருகின்றஒம்..இதுவரை அம்பாளை
மனதாலும் ஞானத்தாலும் எண்ணி வணங்கியது நேற்றுடன் நிறைவடைந்தது.இப்பொழுது அம்பாளின்
சகுண வடிவ குணங்களைப் பார்த்து வருகிறோம்.
இன்றும் அம்பாளின் ஐம்பதாவது ஒன்றாவது
ஸ்லோகத்தில் உள்ள 196,197 &198 மூன்று நாமாவளிகளைப் பார்ப்போம்.
196 ஸர்வஜ்ஞா
ஸர்வஜ்ஞா
===== அனைத்தும் அறிந்தவள்
அவள்
எல்லாம் அறிந்தவள். பிரம்மம் மட்டுமே எல்லாம் அறிந்தவனாக இருக்க முடியும். உச்ச ப்ரம்ம வடிவமாக் அம்பாள் இருப்பதனால்
அவள் அனைத்தையும் அறிந்தவளாகிறாள்.இதற்கு அம்பாளே அனைத்தும் என்ற பொருளும் விளக்கமாகும்.அம்பாள்
நிர்குணஸ்வரூபியாக அனைத்தும் அறிந்த ப்ரம்ம்மாக உள்ளாள். சகுண ரூபத்திலும் அம்பாளே
அறிவின் உச்சவடிவமாக விளங்கு வதால் அவள் அனைத்தும் அறிந்தவள் என்று போற்றப் படுகின்றாள்". பர பிரம்மம் என்பது நிர்குண
பிரம்மம் (பண்புகள் இல்லாதது) மற்றும் அபரா பிரம்மம் என்பது சகுண பிரம்மம்
(பண்புகளுடன்).உடய அம்பாளின் குணங்களைக்குறிக்கின்றன
197. ஸாந்த்ரகருணா
ஸாந்த்ரகருணா
====== நெகிழும் கருணையே வடிவானவள்
அவள் இரக்கமுள்ளவள். இது முக்கியமாக 'தெய்வீகத் தாய்'
என்பதால் தான். "அவளுக்கு வேறு எவரையும் விட, உலகளாவிய தாயின் இதயம் உள்ளது. ஏனென்றால் அவளுடைய இரக்கம் முடிவற்றது
மற்றும் வற்றாதது; அவளுடைய கண்களுக்கு எல்லாம் அவளுடைய
குழந்தைகள். அவளுடைய நிராகரிப்புகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுகின்றன.; அவளுடைய தண்டனைகள் கூட ஒரு கருணையே ஆகும்.. ஆனால்
அவளுடைய இரக்கம் அவளுடைய ஞானத்தை குருடாக்கவோ அல்லது அவளுடைய செயலை
நிர்ணயிக்கப்பட்ட போக்கிலிருந்து (கர்மாவின் விதி) திருப்பவோ இல்லை".
198 ஸமாநாதிகவர்ஜிதா
ஸமாநாதிக
====== சமமாக, இனையாக யாரும்
வர்ஜிதா
======= இல்லாதவள்
தனக்கு
இணையாக யாரும் இல்லாதவள்
அவளுக்கு நிகர் யாரும் இல்லை., “அவருக்கு உடலும்
இல்லை, உறுப்புகளும் இல்லை. அவருக்கு சமமானவர் யாரும் இல்லை.
அவருக்கு உயர்ந்தவர் யாரும் இல்லை. அவருக்கு பல அறிவு சக்திகளும் செயல் சக்திகளும்
உள்ளன.” என்று உபநிஷத் பிரம்மத்தின் இயல்பைப் பற்றிப்
பேசுகிறது.
பகவத் கீதையில் (XI.43) அர்ஜுனன் கிருஷ்ணரை
இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீரே ஒப்பற்ற வலிமையின் இறைவன்,
மூன்று உலகங்களிலும் உமக்கு நிகரானவர் வேறு யாரும் இல்லை;” அவளுக்கு இந்த எல்லா குணங்களும் உள்ளன.
இத்துடன்இன்றையபதிவினைநிறைவுசெய்கிறேன் . நாளை ஐம்பத்து இரண்டாவது
ஸ்லோகத்தில் வரும் நாமாவளியிலிருந்து
அம்பாளின் சகுண ரூப வழிபாட்டையும் அம்பாளை சகுணஸ்வரூபியாக
வழிபடுவதன் பலன்களையும் அது தொடர்பான விளக்கங்களையுமான் பகுதியில் பார்ப்போம்.
இந்த பதிவுகள்
அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம்
அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழக் கிழமை,11, டிஸம்பர்,
2025
அனைவருக்கும்
வணக்கம்.