Sunday, September 28, 2025

 


தினம் ஒரு லலிதா நாமம்----34

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு,28, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம்.                                                                                                                     இன்று நாம் அம்பாளின் முப்பத்துநாலாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் ஸ்தனங்களின் அழகையும்,அம்பாளின் அடிவயிற்றிலிருந்து மேலே படரும் மெல்லிய அழகான ரோமம் ஒரு அழகிய கொடி போலவும் அம்பாளின் ஸ்தன்ங்கள் இரண்டும் நல்ல கனிகள்போலவும் இருப்பதை விளக்குகின்றது.

இந்த நாமம்  அம்பாளின் பதிநாலாவது ஸ்லோகத்தில் வருகின்றன

34.நாப்யாலவால ரோமாலி லதா பல குச த்வயீ

 

நாப்யாலவால

தொப்புள் கொடியிலிருந்து                                        

ரோமாலி

முடி, ரோமம்                                                                              

லதா

கொடி                                                                                                                    

ஃபல

பழங்கள், கனிகள்                                                                                               

குச

மார்பகங்கள்                                                                                       

த்வயீ

இரண்டும்

 

அவளுடைய இரண்டு மார்பகங்களும் அவளுடைய தொப்புளிலிருந்து தோன்றும் கொடியின் முடிவில் உள்ள பழுத்தபழங்கள் போல மிளிர்கின்றன. இந்த நாமத்தின் முக்கியத்துவம் தொப்புள் மற்றும் இதய சக்கரங்களைப் பற்றியது. தொப்புள் சக்கரத்திலிருந்து குண்டலினியை மேல்நோக்கி நகர்த்துவதன் மூலம் இதய சக்கரத்தை தியானிப்பது தியானத்தின் பலனைத் தரும். தொப்புள் மணிபூரக சக்கரத்தைக் குறிப்பதாகும்.மார்பில்  இதயப் பகுதிக்கு அருகில் உள்ளது அனாகதமாகும் .

சவுந்தர்ய லஹரி (பாடல் 76) கூறுகிறது, "சிவனின் கோபத் தீயால் பீடிக்கப்பட்ட அன்பின் கடவுள் உங்கள் தொப்புளில் தஞ்சம் புகுந்தார்."அம்பாள் துன்பத்தால் பீடிக்கப்பெற்றவர்கள் அனைவரையும் தன் தாய்மை அன்புடன் அரவணைத்து அடைக்கலம் தருவாள் என்பதையே இந்த வசனம் குறிக்கின்றது

 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை முப்பத்து ஐந்தாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                     இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                    

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு,28, செப்டம்பர், 2025

Friday, September 26, 2025

 

தினம் ஒரு லலிதா நாமம்----33

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

,வெள்ளீ,26, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம்.                                                                                                                     இன்று நாம் அம்பாளின் முப்பத்து மூன்றாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் ஸ்தனங்களின் அழகையும்,பரமேஸ்வரரின் அன்புக்கு ஈடாக தன் அன்பை அம்பாள் எப்படி தனது ஸ்தன்ங்களின் மூலமாகத் தந்தருள்கிறாள்  என்பதையும் வர்ணிக்கின்றன.

இந்த நாமம்  அம்பாளின் பதிநாலாவது ஸ்லோகத்தில் வருகின்றன

33 காமேஶ்வார ப்ரேம ரத்ந மணி ப்ரதிபண ஸ்தனீ

 

காமேஸ்வர

பரமேஸ்வரரின்                                                                      

ப்ரேம

அன்பு, காதல்,ப்ரேமை                                                                        

ப்ரதிபண

மாற்றாக, ப்ரதியாக                                                                                 

ரத்ன மணி

விலை மதிப்பில்லா ரத்ன்ங்களான                                         

ஸ்தனீ

தன் இரண்டு மார்பகங்களை வழங்குகிறாள்

 

காமேஸ்வரனின் (சிவனின்) அன்பிற்கு ஈடாக அவள் தன் இரண்டு மார்பகங்களையும் அவருக்குக் காணிக்கையாக அளிக்கிறாள். பரமேஸ்வரன் அம்பாளின் மேல் கொண்டுள்ள அன்பிற்கும் காதலுக்கும் அளவே இல்லை.அம்பாளும் அதற்கு ஈடாக அவருக்கு ஏதேனு தர விரும்புகிறாள். பரமேஸ்வரரிடம் இல்லாதது எதுவுமில்லை. எனவே அவரிடம் இல்லாததும் பெண்ணான தன்னிடம் மட்டுமே உள்ள தனது மார்பகங்களை அவருக்குப் பரிசாக தந்து மகிழ்கிறாள்.

இதன் நுட்பமான பொருள் என்னவென்றால், அவள் தன் பக்தர்களுக்கு அளிக்கும் பக்தியைப் போல இரு மடங்கு ஆசீர்வாதங்களை வழங்குவாள்.

 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை முப்பத்து மூன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                     இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்                                                                                                              ஓம் நமசிவாய:                                                                                                சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                          வெள்ளீ,26, செப்டம்பர், 2025


 

Thursday, September 25, 2025

 


தினம் ஒரு லலிதா நாமம்----32

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், 25, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் முப்பத்து இரண்டாவது  திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின்     மார்பில்   அணிந்துள்ள அழகான பதக்கமாலையைப் பற்றி, வர்ணிக்கின்றது 

இந்த நாமம்  அம்பாளின் பதிமூன்றாவது ஸ்லோகத்தில் வருகின்றது

32. ரத்ந க்ரைவேய சிந்தாக லோல முக்தாபலாந்விதா:

 

ரத்ன

ரத்தினங்கள், நவமணிகள்                                                    

க்ரைவேய   

ஹாரம்,பதக்கமாலை                                                     

சிந்தாக                                                  

ஓயாது, விடாது ,தொடர்ந்து   

லோல

அங்கும்இங்கும்ஆடுதல்                                                         

முக்தபல

முத்துக்கள்                                                                                

அன்விதா

அதனுடன்சேர்ந்த,கூடிய                                                                  

 

அவள் ரத்தினங்கள் பதித்த தங்க பதக்கமும், முத்து மாலையும் அணிந்திருக்கிறாள். இந்த ஆபரணங்கள் அவள் கழுத்தில் தொங்கி அலைபாய்வதுபோல் ஆடிக்கொண்டிருக்கின்றன

இந்த ஆபரணங்களின் தொங்கும் தன்மை மனதுடன் ஒப்பிடப்படுகிறது. அவளுடைய முழு வடிவத்தை (தலை முதல் கால் வரை) தியானிக்க முடியாதவர்கள் தாழ்ந்த தர பக்தர்கள் என்றும், லோலா-க்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.                                                                                                        அவளுடைய முழு வடிவத்தை தியானிக்க முடிந்தவர்கள் உயர் தர பக்தர்கள் என்றும், முக்தா-க்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். லோலா-க்கள் அல்லது முக்தா-க்கள் தங்கள் வகைக்கு ஏற்ப தங்கள் பிரார்த்தனைகளின் பலன்களை (பலா) பெறுகிறார்கள். லோலா-முக்தா-பலான்விதாவின் பொருள் இதுதான். அவளை வழிபடும்போது, ​​ஒருவர் தனது மனதை கவனச்சிதறல்கள் இல்லாமல் நிலையாக வைத்திருக்க வேண்டும்.இன்னும் விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் முழுவதுமாகத் தந்துள்ளேன்.கேளுங்கள்.

 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை முப்பத்து மூன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                     இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

 

நன்றி. வணக்கம்                                                                                                           ஓம் நமசிவாய:                                                                                          சிவதாஸன் ஜகன்நாதன்                                                                               வியாழன், 25, செப்டம்பர், 2025